திறந்த கணக்கு முறைமைக்கு அமைய, இன்றிலிருந்து டிசம்பர் 31 ஆம் திகதி வரை இலங்கைக்குள் கோதுமை மாவை இறக்குமதி செய்ய வர்த்தக அமைச்சு அனுமதித்துள்ளது.
வருகின்ற பண்டிகைக் காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை தட்டுப்பாடின்றி குறைந்த விலையில் வழங்குவதற்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.
இதன்போது பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை குறைப்பதற்கும் கோதுமை மாவின் விலையை கட்டுப்படுத்துவதற்கும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
#SriLankaNews
Leave a comment