tamilni 292 scaled
இலங்கைசெய்திகள்

இரட்டிப்பு விலையில் இறக்குமதி செய்யப்பட்ட உரம் தொடர்பில் விசாரணை

Share

இரட்டிப்பு பெறுமதியில் திரவ உரம் இறக்குமதி மூலம் சுமார் 71 கோடி ரூபா மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் உரத் தட்டுப்பாட்டை நீக்கும் தற்காலிக ஏற்பாடுகளில் ஒன்றாக திரவ உரம் இறக்குமதிக்கான அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

இந்தியாவின் நிறுவனம் ஒன்றில் இருந்து கேள்வி கோரல் இன்றி குறித்த திரவ உரம் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

வெறும் ஐந்து அமெரிக்க டொலர் பெறுமதி கொண்ட திரவ உர போத்தல் ஒன்றுக்கு முதற்கட்டத்தில் 12. 5 டொலர்கள் மற்றும் இரண்டாம் கட்டத்தில் 10 டொலர் வீதம் அரசாங்க நிதி செலவிடப்பட்டிருந்தது.

அதன் மூலம் உண்மையான சந்தைப் பெறுமதியை விட இரட்டிப்பு விலையில் திரவ உரம் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது.

இதன் காரணமாக அரசாங்கத்தின் நிதியில் சுமார் 71 கோடி ரூபா மோசடி செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் கமத் தொழில் அமைச்சராக மஹிந்த அமரவீர பொறுப்பேற்றுக் கொண்டதன் பின்னர் சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

தற்போது சம்பவம் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...