tamilni 371 scaled
இலங்கைசெய்திகள்

அழுகிய முட்டை இறக்குமதி

Share

அழுகிய முட்டை இறக்குமதி

அரசாங்கம் தரம் குறைந்த முட்டைகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து மக்களுக்கு விநியோகிப்பதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வாறு அழுகிய முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் பாரிய கொடுக்கல் வாங்கல் மோசடி நடைபெறுவதாகவும் அசேல சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இணையத்தள ஊடகவியலாளர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இந்திய முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதன் மூலம் பாரிய தரகு மோசடி நடைபெறுவதாகவும் , அரச வர்த்தக (பல்வேறு) சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் சிலர் இணைந்து செய்வதாகவும், அதனை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் இந்தியாவில் இருந்து அகற்றப்படும் பாவனைக்கு உதவாத முட்டைகள் இந்நாட்டிற்கு கொண்டு வரப்படுவதாகவும், குறைந்த விலைக்கு முட்டைகள் கிடைத்தாலும் சந்தைக்கு வரும்போது விலை பெருமளவு அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது குற்றச்சாட்டுகள் தவறு என நிரூபிக்கப்பட்டால் பொரளை சந்தியில் நிற்கத் தயார் எனவும் தனது குற்றச்சாட்டுகள் சரியென நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர்களை அம்பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
1689990497 1689990167 Ranil Wikramasingha L
செய்திகள்அரசியல்இலங்கை

ஜென் ஸீ தலைமுறையிடம் அரசியலை ஒப்படைப்போம்: ரணில் விக்கிரமசிங்கவின் SMART UNP பிரகடனம்!

ஐக்கிய தேசியக் கட்சி (UNP) ‘ஸ்மார்ட்’ அரசியலைத் தழுவிய ஒரு புதிய தலைமுறைத் தலைமைத்துவத்தை நோக்கி...

e93a3c90 fc70 11f0 9f00 a7fda7ef067e
உலகம்செய்திகள்

நோர்வே அரச குடும்பத்தில் நிலநடுக்கம்: பாலியல் குற்றச்சாட்டுகளை மறுத்து இளவரசியின் மகன் கண்ணீர் வாக்குமூலம்!

நோர்வே இளவரசி மெட்டே-மேரிட்டின் (Crown Princess Mette-Marit) மகன் மாரியஸ் போர்க் ஹோய்பி, தம்மீது சுமத்தப்பட்டுள்ள...

91 large
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கையைக் கட்டியெழுப்புவோம்: 78 ஆவது சுதந்திர தினத்தில் ஜனாதிபதி ஆற்றிய உரை!

78 ஆவது தேசிய சுதந்திர தின தேசிய வைபவம், சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

1770184008 IMG 20260204 WA0015
செய்திகள்அரசியல்இலங்கை

தாயகத்தில் இடைக்கால நிர்வாகம் வேண்டும்! – ஐ.நா-வுக்கு தமிழ் மக்கள் அனுப்பிய வரலாற்று முக்கியத்துவமிக்க மனு.

எனப் பிரகடனப்படுத்தி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இன்று முன்னெடுக்கப்பட்ட பேரெழுச்சிப் போராட்டங்களின் போது, ஐக்கிய...