இலங்கைசெய்திகள்

அழுகிய முட்டை இறக்குமதி

tamilni 371 scaled
Share

அழுகிய முட்டை இறக்குமதி

அரசாங்கம் தரம் குறைந்த முட்டைகளை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து மக்களுக்கு விநியோகிப்பதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்க தலைவர் அசேல சம்பத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவ்வாறு அழுகிய முட்டைகளை இறக்குமதி செய்வதன் மூலம் பாரிய கொடுக்கல் வாங்கல் மோசடி நடைபெறுவதாகவும் அசேல சம்பத் சுட்டிக்காட்டியுள்ளார்.

இணையத்தள ஊடகவியலாளர் ஒருவர் வினவிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இந்திய முட்டைகளை இலங்கைக்கு இறக்குமதி செய்வதன் மூலம் பாரிய தரகு மோசடி நடைபெறுவதாகவும் , அரச வர்த்தக (பல்வேறு) சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் சிலர் இணைந்து செய்வதாகவும், அதனை நிரூபிக்கத் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாளாந்தம் இந்தியாவில் இருந்து அகற்றப்படும் பாவனைக்கு உதவாத முட்டைகள் இந்நாட்டிற்கு கொண்டு வரப்படுவதாகவும், குறைந்த விலைக்கு முட்டைகள் கிடைத்தாலும் சந்தைக்கு வரும்போது விலை பெருமளவு அதிகரிப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனது குற்றச்சாட்டுகள் தவறு என நிரூபிக்கப்பட்டால் பொரளை சந்தியில் நிற்கத் தயார் எனவும் தனது குற்றச்சாட்டுகள் சரியென நிரூபிக்கப்பட்டால் குற்றம் சாட்டப்பட்டவர்களை அம்பலப்படுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Share
Related Articles
19 9
உலகம்செய்திகள்

பயங்கரவாதிகளின் ஏவுகணை தளத்தை தாக்கி அழித்த இந்தியா

பாகிஸ்தானின் (Pakistan) சியால்கோட்டில் இயங்கி வந்த பயங்கரவாதிகளின் ஏவுகணை ஏவுதளம் இந்திய இராணுவத்தினரால் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக...

17 9
இலங்கைசெய்திகள்

கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் இரவில் மந்திராலோசனை நடத்தும் அரசியல்வாதிகள்

சமகாலத்தில் கொழும்பிலுள்ள பிரபல ஹோட்டல்களில் அரசியல் முக்கியஸ்தர்கள் இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு மாநகர...

20 10
உலகம்செய்திகள்

ரோகித் சர்மாவை தொடர்ந்து விராட் கோலி எடுத்த முடிவு

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி(Virat Kholi) டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக...

18 9
உலகம்செய்திகள்

ஐபிலை தொடர்ந்து மற்றுமொரு கிரிக்கெட் தொடரும் ஒத்திவைப்பு..!

போர் பதற்றம் காரணமாக இந்தியன் பிரீமியர் லீக்2025 தொடரைத் தொடர்ந்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் 2025...