vimal 1
அரசியல்இலங்கைசெய்திகள்

பொருளாதார நெருக்கடிக்கு IMF மருந்தாகாது!

Share

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி என்ற நோய்க்கு சர்வதேச நாணய நிதியத்தால் வழங்கப்படும் மருந்து தீர்வாக அமையாது. மாறாக அது நோயை தீவிரப்படுத்தும். அதன்மூலம் சமூக நெருக்கடி உச்சம் பெறும்.”

இவ்வாறு ‘உத்தர லங்கா சபாகய’ என்ற கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.

” சர்வதேச நாணய நிதியமானது, அமெரிக்காவின் வெளிவிவகாரக் கொள்கையின் ஓர் அங்கமாகும். எனவே, ‘பொருளாதார நெருக்கடி’ என்ற பிரச்சினைக்கு சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதால் தீர்வு கிட்டாது, நோயை குணப்படுத்துவதற்கு அல்ல, மாறாக நோயை தக்க வைத்துக்கொள்ளவே அங்கிருந்து மருந்து வழங்கப்படும். எனவே, சர்வதேச நாணய நிதியத்தை நாடினால் மீண்டெழலாம் என நினைப்பது தவறு. அதன்மூலம் சமூக நெருக்கடி மேலும் அதிகரிக்கும் என்பதே உண்மை.

ஐ.எம்.எவ்பை நாடுவதால் பொருளாதார நெருக்கடி தீர்ந்து, சமூக பாதுகாப்பு ஏற்படாது. அது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். அதனால்தான் 2 ஆம் கட்ட போராட்டம் ஆரம்பமாகும் என அநுரகுமார திஸாநாயக்க போன்றவர்கள் அறிவித்து வருகின்றனர்.” – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
4670422 455699102
செய்திகள்உலகம்

கிறிஸ்துமஸ் தின போர் நிறுத்தத்தை ரஷ்யா நிராகரித்தது வேதனையளிக்கிறது – பாப்பரசர் 14-வது லியோ கவலை!

உலகம் முழுவதும் நாளை (25) கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படவுள்ள நிலையில், பாப்பரசர் 14-வது லியோ விடுத்த...

images 10 3
செய்திகள்உலகம்

தாய்வானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவு!

தாய்வானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம்...

images 9 3
அரசியல்இலங்கைசெய்திகள்

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் துப்பாக்கி வெடித்ததில் கான்ஸ்டபிள் காயம்!

அம்பலாங்கொடை பொலிஸ் நிலையத்தில் இன்று (24) மாலை நிகழ்ந்த எதிர்பாராத துப்பாக்கிச் சூட்டு விபத்தில் பொலிஸ்...

images 9 3
செய்திகள்இலங்கை

நீர்நிலைகளில் இறங்கும்போது எச்சரிக்கை: பண்டிகைக் காலத்தில் பொதுமக்களுக்கு வைத்திய நிபுணர் விடுத்த அவசர வேண்டுகோள்!

தற்போது நிலவும் அனர்த்தச் சூழல் மற்றும் பண்டிகைக் காலத்தைக் கருத்திற் கொண்டு, நீர்நிலைகளைப் பயன்படுத்தும் போது...