நிதி அமைச்சர் அலி சப்ரி தலைமையிலான குழு வொஷிங்டனுக்கு (IMF) செல்கிறது.
பொருளாதார நெருக்கடிக்கு நாடு முகம்கொடுத்துள்ள நிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்பாடுசெய்யப்பட்டுள்ள கலந்துரையாடலில் கலந்துகொள்ளும்முகமாகவே இந்த குழு வொஷிங்டனுக்கு செல்கிறது.
எதிர்வரும் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்த கலந்துரையாடல் 5 நாட்களுக்கு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த குழுவில், நிதி அமைச்சர் அலி சப்ரி, மத்தியவங்கி ஆளுநர், நிதியமைச்சின் செயலாளர் உள்ளடங்களாக ஐவர் இடம்பெற்றுள்ளனர்.
#SriLankaNews
Leave a comment