IMF நிதியுதவி – இன்று கலந்துரையாடல்

IMF Jpeg

இலங்கை உள்ளிட்ட நாடுகளின் கடன்கள் தொடர்பில் ஆராய சீனா, இந்தியா, சவுதி அரேபியா மற்றும் ஏழு நாடுகளின் குழுவின் அதிகாரிகள் இன்று (17) புதிய இறையாண்மை கடன் வட்ட மேசையின் முதல் மெய்நிகர் கலந்துரையாடலில் பங்கேற்கவுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) தெரிவித்துள்ளது.

எத்தியோப்பியா, சாம்பியா மற்றும் கானா ஆகிய 20 பொதுவான கட்டமைப்பின் கீழ் கடன்களை கோரிய நாடுகளின் அதிகாரிகளும், தங்கள் சொந்த கடன் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ள இலங்கை, சுரினாம் மற்றும் ஈக்வடார் போன்ற நடுத்தர வருமான நாடுகளின் அதிகாரிகளும் இந்த வட்டமேசை சந்திப்பில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version