vijitha herath
அரசியல்இலங்கைசெய்திகள்

IMF கடன் – வெட்கப்பட வேண்டிய விடயம்!!

Share

எங்களிடம் கடன் மறுசீரமைப்புக்கு சரியான திட்டங்கள் இருந்திருந்தால் இவ்வாறு IMF நிபந்தனைகளுக்கு இணங்கியிருக்க வேண்டியதில்லை என்றும் கடன்சுமையை அதிகரிப்பதால் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்றும் மக்கள் விடுதலை முன்னணியின் பிரசார செயலாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கை தொடர்பில் வியாழக்கிழமை (23) நடைபெற்ற இரண்டாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்குறிப்பிட்ட விடயத்தை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச நாணய நிதியத்தின் கடன் கிடைத்ததும் மேலே வருவோம் என்று அரசாங்கம் கூறுவது நகைச்சுவையானது. கடந்த காலங்களில் ஊழல் மோசடியின்றி நடவடிக்கைகளை முன்னெடுக்காமையே நாடு இந்த நிலைக்கு தள்ளப்படக் காரணமாக உள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் கடனை பெற்றுக்கொள்வது பெருமையடையும் விடயமல்ல. வெட்கப்பட வேண்டிய விடயமே.

சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்வதற்கு நிதி அமைச்சராக இருந்த பசில் ராஜபக்‌ஷவே தீர்மானித்தார். அப்போது அதன் நிபந்தனைகளை பாராளுமன்றத்தில் முன்வைக்க வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

ஆனால் நிதி அமைச்சராக ரணில் வந்த பின்னரும் இன்னும் சரியாக அந்த நிபந்தனைகள் முன்வைக்கப்படவில்லை. எவ்வாறாயினும் எரிபொருள் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு, எரிவாயுவிலை அதிகரிப்பு, வரி அதிகரிப்பு என்பன இந்த நிபந்தனைகளுக்கமையே நடந்தன.

வட்டியுடன் வழங்கும் கடனே இது. இதனை பெறுவதா? இல்லையா? என்பதனை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும். நிபந்தனைகளுக்கு இணங்கியே விலைகள், கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன.

எங்களிடம் கடன் மறுசீரமைப்புக்கு சரியான திட்டங்கள் இருந்திருந்தால் இவ்வாறு நிபந்தனைகளுக்கு இணங்கியிருக்க வேண்டியதில்லை. இப்போது நடப்பது கசாயம் என்று நஞ்சைக் குடிப்பதை போன்றது. வங்குரோத்தடைந்த நாட்டுக்கு கடன்சுமையை அதிகரிப்பதால் அதில் இருந்து தப்பிக்க முடியாது.

இந்த நாட்டின் வங்குரோத்து நிலைக்கு காரணமான அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய முடியுமா? முடிந்தால் அதனை செய்துகாட்டுங்கள்.

இதேவேளை சர்வதேச நாணய நிதியத்தை காட்டி மக்களை மயக்கமடைய செய்து, மக்கள் உறங்கும் போது அவர்களின் உடைகளையும் கழற்றி எடுக்கும் வேலையையே செய்யப் போகின்றனர். எழுந்து பார்க்கும் போது மக்களிடம் உடைகளும் இருக்காது. இன்னும் இரண்டு வருடங்களில் அது நடக்கப் போகின்றது என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...