KILINO
இலங்கைசெய்திகள்

கிளிநொச்சியில் மீண்டும் சட்டவிரோத மணல் அகழ்வு!

Share

கிளிநொச்சியில் மீண்டும் சட்டவிரோத மணல் அகழ்வு!

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மருதங்குளம் , உடுப்பாற்றுக்கண்டல், மற்றும் உப்பாறு ஆகிய பகுதியில் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வு இடம்பெற்று வருகின்றது என அங்குள்ள விவசாயிகளும் பொதுமக்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டவிரோத மணல் அகழ்வுகள் பிரதேச செயலாளரின் முயற்சியால் ராணுவத்தினரின் உதவியுடன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள மருதங்குளம் உடுப்பாற்றுக்கண்டல் உப்பாறு போன்ற பகுதிகளில் தொடர்ந்தும் சட்டவிரோத மணல் அகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.

எனவே இது  தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனம் செலுத்தி சட்டவிரோத மணல் அகழ்வை தடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
22 2
இலங்கைசெய்திகள்

ஐக்கிய நாடுகளின் பட்டிலில் இந்தியாவை முந்திய இலங்கை

ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான வளர்ச்சிக்கான இலக்குகள் பட்டியலில், இலங்கைக்கு 93வது இடம் கிடைத்துள்ளது. வறுமை...

21 2
இலங்கைசெய்திகள்

இருநூறு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தைக் கைப்பற்றிய அரசாங்கம்

நாடு தழுவிய ரீதியில் 200 உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கம்...

20 1
செய்திகள்பொழுதுபோக்கு

இறுதி நாளில் இந்தியாவை வீழ்த்திய இங்கிலாந்து

சுற்றுலா இந்திய அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered 3
இலங்கைசெய்திகள்

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

ஜனாதிபதி செயலகத்தின் வாகனங்களை மோசடியாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிரான...