tamilni 446 scaled
அரசியல்இலங்கைசெய்திகள்

யாருடனும் இணையத் தயார் – சிறீதரன் அறிவிப்பு

Share

யாருடனும் இணையத் தயார் – சிறீதரன் அறிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவ விவகாரத்தில் இந்தியா தலையிடவில்லை என தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுடன் நான் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்திற்கு யார் வந்தாலும் அவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படும் நிலைப்பாட்டில் தான் இந்தியா இருக்கின்றது. இந்தியாவின் ஒத்துழைப்பு எமக்கு என்றும் உறுதியானது.

ஜனநாயக ரீதியில் உள்ளக மட்டத்தில் தேர்தல் இடம்பெற்றது. கட்சியின் உறுப்பினர்களின் ஆதரவுடன் நான் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். எனக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுள்ளேன்.

நண்பர் எம்.ஏ.சுமந்திரன் எதிர்மறையானவரல்ல. இயல்பானவர். எனது செயற்பாடுகளுக்கும், அவர் முழமையான ஒத்துழைப்பை வழங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு பூரணமாக உள்ளது.

கட்சியின் செயலாளர் பதவி கிழக்கு மாகாணத்திற்கு வழங்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் உறுதியாக உள்ளேன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பலப்படுத்தவும் விலகிச் சென்ற சிரேஷ்ட தலைவர்களை ஒன்றிணைக்கவும் அனைவரது ஒத்துழைப்புடனும் நடவடிக்கைகளை முன்னெடுக்க தீவிர கரிசனை கொண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
நவாலி திருவிழா
இலங்கை

நவாலி திருவிழாவிலும் அசம்பாவிதம் – பொதுமக்கள் பலரும் பாதிப்பு!

நேற்று இரவு, நவாலி அந்திரான் கிராமத்தில் நடைபெற்ற திருவிழாவின் போது வாணவேடிக்கையால் பனை மரம் ஒன்றும்...

dengue original 1
இலங்கை

எழுபதை கடந்தது டெங்கு மரணங்கள்!

2026 இன் இதுவரையான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் 93,381 ஆக அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப்...

சுற்றிவளைப்புக்கள்
இலங்கை

அதிரடியாக மேற்கொள்ளப்பட்டுள்ள சுற்றிவளைப்புக்கள் – 751 சந்தேக நபர்கள் கைது!

முழு நாடுமே ஒன்றாக நடவடிக்கையின் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் 751 சந்தேகநபர்கள் கைது...

சீன மின் விளக்குகள் பறிமுத
இலங்கை

ஆலய திருவிழாவில் ஏற்பட்ட அசம்பாவிதம் – நூற்றுக்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில்!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத்தில் நடைபெற்ற ஆலயத் திருவிழாவின் போது, நூற்றுக்கணக்கானோர் கண் பாதிப்புக்குள்ளான சம்பவம்...