tamilni 445 scaled
இலங்கைசெய்திகள்

மோசமான கட்டத்தில் இலங்கை: மக்களை ஏமாற்றும் அரசு

Share

மோசமான கட்டத்தில் இலங்கை: மக்களை ஏமாற்றும் அரசு

ஜனவரி மாதத்தில் பணவீக்கம் 7 வீதமாக உயரும் என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

ஆனால் நிச்சயமாக ஜனவரி மாத பணவீக்க வீதம் 9 வீதத்திற்கு மேல் உயரும் வாய்ப்புகள் அதிகம் என இலங்கையின் வடமேற்கு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறையின் பேராசிரியர் அமிந்த மெத்சிலா பெரேரா குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலத்தில் பணவீக்கத்தை சராசரியாக 4-6 சதவீதமாக பராமரிக்க முடியும் என்று ஆளுநர் நம்பிக்கை தெரிவித்தாலும், தற்போதைய விலை உயர்வு மற்றும் பொருளாதார சூழலின் படி பணவீக்கம் ஆண்டு முழுவதும் இதை விட அதிகமாக இருக்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், பணவீக்கம் 2.5 வீதத்தால் அதிகரிக்கும் என மத்திய வங்கியின் ஆளுநர் கணித்திருந்த போதிலும், எதிர்வரும் ஏப்ரல் பண்டிகை காலப்பகுதிக்குள் பணவீக்கம் 9-10 வீதமாக அதிகரிப்பதை நிறுத்த முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில வர்த்தகர்கள் VAT வரியை பயன்படுத்தி பொருட்கள் மற்றும் சேவைகளின் விலையை உயர்த்தி வருவதாகவும், ஆனால் அரசாங்கம் அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்காதது தான் இதற்கு காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் குறைந்த அளவிலான பொருளாதார வளர்ச்சியும் பணவீக்க உயர்வை பாதிக்கிறது மற்றும் அரசாங்கம் 5 சதவீத பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்த்தாலும், சர்வதேச நாணய நிதியம் பொருளாதார வளர்ச்சி 1.6 சதவீதமாக இருக்கும் என்று கணித்துள்ளதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....