15 12
இலங்கைசெய்திகள்

இலங்கைக்கு செல்லும் பிரஜைகளுக்கு விசா கட்டுப்பாடுகள் : அதிருப்தி வெளியிட்டுள்ள பாகிஸ்தான்

Share

இலங்கைக்கு செல்லும் பிரஜைகளுக்கு விசா கட்டுப்பாடுகள் : அதிருப்தி வெளியிட்டுள்ள பாகிஸ்தான்

இலங்கைக்கு செல்லும் தமது பிரஜைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள விசா கட்டுப்பாடுகள் குறித்து, பாகிஸ்தான் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சர்வதேச அரங்குகளிலும், பயங்கரவாதத்திற்கு எதிரான போரிலும் இலங்கைக்கு ஆதரவாக நிற்கும் தமது நாட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகள் குறித்து, பாகிஸ்தான் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது

விசா இல்லாமல் இலங்கைக்குள் நுழைவதற்காக வகைப்படுத்தப்பட்ட நாடுகளின் பட்டியலிலிருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டதை அடுத்தே,பாகிஸ்தான் இந்த அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

இஸ்லாமாபாத்தில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் ரவீந்திர விஜேகுணவர்தன, இதனை வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன், பாகிஸ்தானையும் அதே பிரிவில் சேர்க்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதேநேரம், இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஜீஸ், இலங்கையால் பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்கும் நடைமுறை குறித்து தீவிர அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

இது இந்தியா உட்பட பல நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது “மாற்றாந்தாய்” செயற்பாடு என்று அவர் விமர்சித்துள்ளார்.

அத்துடன், பாகிஸ்தானிய பிரஜைகளுக்கான தற்போது தடைசெய்யப்பட்டுள்ள விசா நடைமுறைகள், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால மற்றும் வரலாற்று ரீதியாக நெருங்கிய உறவுகளில் பாதகமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...