நைஜீரியாவிடம் கடன் வாங்கினால், நாட்டைக் கொடுக்க வேண்டிவரும்: ஐதேக

ranil wickremesinghe 1

சர்வதேச தொடர்புகள் உள்ள ஒரேயொரு தலைவர் ரணில் விக்ரமசிங்க என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ருவான் விஜேவர்தனதெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதிருக்கும் நிலைமை தொடருமாயின் கடன் பெற்ற அனைத்து நாடுகளுக்கும் இலங்கையிலுள்ள நிலப்பரப்புக்களை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் மேலும் எச்சரித்துள்ளார்.

அவர் மேலும் கூறுகையில்;

நைஜீரியாவிலிருந்து கடன் அடிப்படையில் மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யவுள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில், இந்த கடனை மீள செலுத்த முடியாத நிலைமை ஏற்படுமாக இருந்தால் நாட்டிலுள்ள முக்கிய நிலப்பரப்புகளை நைஜீரியாவிற்கு விற்க வேண்டியேற்படும்.

நாட்டில் தற்போது காணப்படும் டொலர் நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கு சர்வதேச தொடர்புகள் உள்ள ஒருவரால் மாத்திரமே முடியும்.

அவ்வாறு இலங்கையில் சர்வதேச தொடர்புகள் காணப்படும் ஒரேயொரு தலைவர் ரணில் விக்ரமசிங்க மாத்திரமே. எனவே ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தினால் மாத்திரமே தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

#SrilankaNews

Exit mobile version