சர்வதேச நாணய நிதியத்தை நாடுவது தவறெனில் மாற்று வழியை கூறவும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
நாங்கள் அரச நிதி முகாமைத்துவ நெருக்கடி நிலைமையில் வெளிநாட்டு கடனை மீளச் செலுத்துவதையும் ஒத்திவைத்துள்ளோம்.
எனினும் அது தொடர்பான நடவடிக்கைகளை கைவிட முடியாது. இது தொடர்பான முறைமையை முன்வைத்தால் அது தொடர்பில் ஆராயலாம்.
பொருளாதார நெருக்கடியில் சர்வதேச நாணய நிதியத்தை நாடாது உதவிகளை பெற்றுக்கொள்ள மாற்று வழிகள் இருந்தால் அதனை எவராவது முன்வைத்தால் அது தொடர்பில் ஆராய்வதற்குத் தயார் – என்றார்.
#SriLankaNews

