276996331 4921993074516195 5155549462485385903 n
அரசியல்இலங்கைசெய்திகள்

கோட்டா விலகினால் ஆட்சியை பொறுப்பேற்போம்!! – பிரதான கட்சிகள் கூட்டாக வலியுறுத்து

Share

அதிபர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகினால் ஆட்சியை பொறுப்பேற்பதற்கு தாம் தயார் என ஐக்கிய மக்கள் சக்தியினரும், தேசிய மக்கள் சக்தியினரும் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் தெரிவித்துள்ளனர்.

இலங்கை நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கான கூட்டம் சபாநாயகர் தலைமையில் இன்று நடைபெற்றது.

நாட்டில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பு நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக Zoom ஊடாகவே இக்கூட்டம் நடைபெற்றுள்ளது. இதில் ஆளுங்கட்சி சார்பில் முக்கிய தலைவர்கள் பங்கேற்கவில்லை என தெரியவருகின்றது. தமது வீடுகள் கொளுத்தப்பட்டுள்ளதால் கணினியும் தீக்கிரையாகியுள்ளது. எனவே, கூட்டத்தில் பங்கேற்கமுடியாத சூழ்நிலையென ஆளுங்கட்சியின் தெரியப்படுத்தியுள்ளனர்.

இடைக்கால அரசமைப்பது சம்பந்தமாக பேசப்பட்ட வேளையிலேயே மேற்படி இரு கட்சிகளும், ஜனாதிபதி பதவி விலகினால் ஆட்சியை பொறுப்பேற்க தயாரென அறிவித்துள்ளன.

ஜனாதிபதிக்கு எதிரான பிரேரணையையும் விவாதத்துக்கு உட்படுத்த இணக்கம் காணப்பட்டுள்ளது.

நாடாளுமன்றம் திட்டமிட்ட அடிப்படையில் எதிர்வரும் 17 ஆம் திகதி கூடவுள்ளது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...