Namal 55
இலங்கைசெய்திகள்

அரசியல் கைதிகள் விடுதலைக்கு உறுதுணை வழங்குவேன் – நாமல் உறுதி

Share

அரசியல் கைதிகள் விடுதலைக்கு உறுதுணை வழங்குவேன் – நாமல் உறுதி

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அநுராதபுரம் சிறைக்கு இன்று விஜயம் மேற்கொண்டு அரசியல் கைதிகளுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 தமிழ் அரசியல் கைதிகள் அமைச்சர் நாமலுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

தமது பாதுகாப்பின்மை தொடர்பில் தெளிவுபடுத்த அமைச்சர் நாமலுடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கைதிகள் கோரியிருந்தனர்.

இந்த நிலையில் என்னை சந்திக்க கைதிகள் குழு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுடன் பேச்சு நடத்த அநுராதபுரம் சிறைக்கு இன்று சென்று கலந்துரையாடினேன்.

அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் விடுவிக்கப்பட்டவுடன் அவர்களுக்கு மறுவாழ்வளித்து சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்க நான் உறுதுணையாக இருப்பேன் என நாமல் ராஜபக்ச அரசியல் கைதிகளிடம் உறுதியளித்துள்ளார்.

இதனை அநுராதபுரம் சிறைக்கு சென்று சந்திப்பு நிறைவடைந்த நிலையில் தனது ருவிற்றர் பக்க பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
images 2 3
செய்திகள்விளையாட்டு

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தானை துவம்சம் செய்த இந்தியா! – 61 ஓட்டங்களால் அபார வெற்றி!

டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 27-ஆவது லீக் போட்டியில், பரம எதிரிகளான இந்தியா மற்றும்...

25 688daecf5398b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நாளை நீதிமன்றப் பணிகள் முடக்கம்! – சட்டத்தரணி படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நாடளாவிய ரீதியில் பணிப்பகிஷ்கரிப்பு!

பத்தரமுல்ல, அக்குரேகொட பகுதியில் இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச் சூட்டில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் படுகொலை...

Screenshot 2026 02 15 222008
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றவாளிகளுக்குத் தடை! – புதிய தரவுத்தளம் மூலம் அரசாங்கம் அதிரடி நடவடிக்கை!

சிறுவர் துஷ்பிரயோகக் குற்றங்களுடன் தொடர்புடையவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவொரு பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய...

Screenshot 2026 02 15 222512
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் முதல்முறை: காசல் வீதி மருத்துவமனையில் இலவச IVF சிகிச்சை! – 2,000-க்கும் மேற்பட்ட தம்பதியினர் விண்ணப்பம்!

கொழும்பு காசல் வீதி மகளிர் மருத்துவமனையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள முற்றுமுழுதான இலவச செயற்கை கருத்தரிப்பு (IVF) சிகிச்சைக்காக...