Namal 55
இலங்கைசெய்திகள்

அரசியல் கைதிகள் விடுதலைக்கு உறுதுணை வழங்குவேன் – நாமல் உறுதி

Share

அரசியல் கைதிகள் விடுதலைக்கு உறுதுணை வழங்குவேன் – நாமல் உறுதி

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச அநுராதபுரம் சிறைக்கு இன்று விஜயம் மேற்கொண்டு அரசியல் கைதிகளுடன் சந்திப்பு ஒன்றை நடத்தியுள்ளார்.

அநுராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 11 தமிழ் அரசியல் கைதிகள் அமைச்சர் நாமலுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்தார்.

தமது பாதுகாப்பின்மை தொடர்பில் தெளிவுபடுத்த அமைச்சர் நாமலுடன் அவசர சந்திப்பொன்றை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் கைதிகள் கோரியிருந்தனர்.

இந்த நிலையில் என்னை சந்திக்க கைதிகள் குழு விடுத்த வேண்டுகோளுக்கிணங்க அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அவர்களுடன் பேச்சு நடத்த அநுராதபுரம் சிறைக்கு இன்று சென்று கலந்துரையாடினேன்.

அவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுக்கள் விடுவிக்கப்பட்டவுடன் அவர்களுக்கு மறுவாழ்வளித்து சமூகத்தில் மீண்டும் ஒருங்கிணைக்க நான் உறுதுணையாக இருப்பேன் என நாமல் ராஜபக்ச அரசியல் கைதிகளிடம் உறுதியளித்துள்ளார்.

இதனை அநுராதபுரம் சிறைக்கு சென்று சந்திப்பு நிறைவடைந்த நிலையில் தனது ருவிற்றர் பக்க பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
8556906 vijay
செய்திகள்இந்தியா

மாவீரர் தினத்தில் ‘தமிழ்த் தேசியத்திற்காகப் போராடிய மாவீரர்களை வணங்குவோம்’: தளபதி விஜய் நினைவுகூர்ந்து பதிவு!

தமிழ் மக்களின் விடுதலைக்காகப் போராடி வீர மரணமடைந்த மாவீரர்களை, தமிழ்த் வெற்றிக் கழகத்தின் (Tamilaga Vettri...

images 2 4
செய்திகள்இந்தியா

வெள்ளைக்கொடியுடன் சரணடைந்தவர்கள் எங்கே? சர்வதேசத்தின் மௌனம் ஏன்? சீமான் கேள்வி

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மாவீரர்...

images 12
செய்திகள்இலங்கை

டிட்வா புயல் திருகோணமலையிலிருந்து 50 கி.மீ தெற்கே மையம்; செட்டிக்குளத்தில் 315 மி.மீ அதிகபட்ச மழைவீழ்ச்சி பதிவு!

நாட்டில் நிலவும் மோசமான காலநிலைக்கான காரணமான ‘டிட்வா’ (DITWA) புயல் குறித்த முக்கியத் தகவலை வளிமண்டலவியல்...

Flood
செய்திகள்இலங்கை

அத்தனகலு ஓயாவைச் சுற்றியுள்ள தாழ்வான பகுதிகளில் பெரும் வெள்ள அபாயம்: மக்கள் உடனடியாக வெளியேற அறிவுறுத்தல்!

நாட்டில் நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, அத்தனகலு ஓயாவைச் (Attanagalu Oya) சுற்றியுள்ள தாழ்வான...