15 9
இலங்கைசெய்திகள்

கோர விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இளைஞன்: சாரதி தப்பியோட்டம்

Share

கோர விபத்தில் சிக்கி ஆபத்தான நிலையில் இளைஞன்: சாரதி தப்பியோட்டம்

காரில் மோதுண்டு விபத்துக்குள்ளாகி நடு வீதியில் விழுந்த மோட்டார் சைக்கிள் சாரதியை பின்னால் வந்த ஜீப் வண்டியொன்று மற்றுமொரு விபத்தை ஏற்படுத்தி விட்டு தப்பிச்சென்றுள்ளதாக கொட்டாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த விபத்தில் காயமடைந்த 28 வயதுடைய இளைஞனின் இரண்டு கால்களும் ஒரு கையும் முறிந்துள்ளதுடன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் இரண்டு சத்திரசிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு படுகாயமடைந்த இளைஞன் இரவு பணியை முடித்துக்கொண்டு கொழும்பில் இருந்து ஹைலெவல் வீதி வழியாக கோட்டாவை நோக்கி வந்து கொண்டிருந்த போது காரில் மோதுண்டு மோட்டார் சைக்கிள் வீதியில் இழுத்துச்செல்லப்பட்டுள்ளது.

இதன்போது பின்னால் வந்த ஜீப் வண்டி மீண்டும் விபத்தினை ஏற்படுத்திவிட்டு நிற்காமல் அங்கிருந்து தப்பிச்சென்றுள்ளதாகவும், தற்போது ஜீப்பை பொலிஸார் தேடி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
12
இலங்கைசெய்திகள்

டக்ளஸின் ஆதரவை நாடும் தமிழ்கட்சிகள்! இன்று இடம்பெறவுள்ள முக்கிய சந்திப்பு

ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் (சங்குச் சின்னக் கட்சியும்), அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (சைக்கிள்...

11
இலங்கைசெய்திகள்

முல்லைத்தீவில் வீடு உடைத்து தங்க நகைகள் திருட்டு!

முல்லைத்தீவு- முள்ளியவளை, மாமூலை பகுதியில் உள்ள வீடு ஒன்றில் தங்க நகைகள் திருடப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது...

3 4
இலங்கைசெய்திகள்

கணேமுல்லே சஞ்சீவ படுகொலை! அடையாள அணிவகுப்பில் வெளியான முக்கிய தகவல்

பாதாள உலகக் கும்பல் உறுப்பினர் கணேமுல்லே சஞ்சீவவை சுட்டுக் கொன்ற சந்தேக நபர் தொடர்பில் இன்று...

4 3
இலங்கைசெய்திகள்

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் சங்க தலைவி முன்வைத்துள்ள கோரிக்கை

செம்மணி மனித புதைகுழி அகழ்வுகள் சர்வதேச கண்காணிப்புடன் மேற்கொள்ளப்பட வேண்டும் என வடக்கிழக்கு வலிந்து காணாமல்...