கெரவலப்பிட்டிய யுகதனவி மின் உற்பத்தி
இலங்கைசெய்திகள்

ஹெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவுக்கு?

Share

ஹெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் அமெரிக்காவுக்கு?

ஹெரலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையத்தின் 40 வீத பங்குகளை கொள்வனவு செய்வதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை அரசுடன்ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த ஒப்பந்தத்தில், கொழும்பு துறைமுகத்துக்கு அப்பால் உள்ள கடலில் இயற்கை திரவ வாயு முனையம் நிர்மாணித்தல் மற்றும் கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் வரை குழாய் கட்டமைப்பை அமைத்தல் ஆகியவை உள்ளடங்குகின்றன என அமெரிக்க நிறுவனம் பகிரங்கப்படுத்தியுள்ளது.

கெரவலப்பிட்டிய மின் உற்பத்தி நிலையம் ஏற்கனவே 310 மெகாவோட் கொள்ளளவை கொண்டிருக்கின்றது.

2023 ஆம் ஆண்டளவில் மேலதிகமாக 700 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது என அந் நிறுவனம் மேலும் அறிவித்துள்ளது.

இதேவேளை, இது தொடர்பில் விரைவில் மின்சக்தி அமைச்சர் நாடாளுமன்றில் அறிவிப்பார் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
15 6
உலகம்செய்திகள்

அமெரிக்க உளவுத்தகவல் கசிவு! விசாரணைக்கு தயாராகும் ட்ம்பின் ஆதரவாளர்

ஈரானின் அணுசக்தி தளங்கள் முழுமையாக அழிக்கப்படவில்லை என்று அமெரிக்க உளவுத்துறையின் முதற்கட்ட மதிப்பீட்டில் வெிளியடப்பட்டமைக்கு மத்திய...

16 6
இந்தியாசெய்திகள்

41 ஆண்டுகளுக்குப் பின்னர் விண்வெளி சென்ற இந்தியா வீரர்

இந்தியாவிலிருந்து விண்வெளிக்கு 41 ஆண்டுகளுக்கு பின்னர் விண்வெளி வீரர்களில் ஒருவரான சுபான்ஷு சுக்லா அனுப்பப்பட்டுள்ளார். மனிதர்களை...

14 6
இலங்கைசெய்திகள்

இஸ்ரேலின் ஜனநாயக விரோத செயற்பாடு: விமல் வீரவன்சவின் குற்றச்சாட்டு

அமெரிக்காவின் முறையற்ற செயற்பாட்டை கண்டிக்கும் தற்றுணிவு அரசாங்கத்துக்கு கிடையாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல்...

12 9
இலங்கைசெய்திகள்

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளுக்கு ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டு!

இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளர் பாராட்டுத் தெரிவித்துள்ளார். இலங்கைக்கு வருகை தந்துள்ள...