சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள் கவனயீர்ப்புப் போராட்டம்!

சுகாதார தொழிற்சங்கக் கூட்டமைப்புடன் இணைந்து, நாடு தழுவிய ரீதியில் மாகாண ரீதியாக நடத்தப்படும் தொழிற்சங்க நடவடிக்கை இன்றைய தினம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்று வருகிறது.

இன்று காலை 10.30 மணியளவில் வடமாகாணம் முழுவதும் உள்ள சுகாதார தொழிற்சங்க உறுப்பினர்கள் கவனயீர்ப்புப் பேரணி ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர்.

Protest 02 2

இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் சுகாதார துறையை அழிக்காதே, சுகாதார நிர்வாக சேவையை ஆரம்பி, விசேட கொடுப்பனவை உயர்த்து, பொது மக்களின் ஆரோக்கியத்தில் கவனம் எடு, பதவி உயர்வு முரண்பாட்டைத் தீர்த்து வை, பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்களை வழங்கு, போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டது.

போராட்டம் காரணமாக யாழ்.நகரப் பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அதனை சீர் செய்வதற்காக பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

#SrilankaNews

Exit mobile version