” இலங்கை கிரிக்கெட் அணியின் வெற்றியின் பின்னணியில் நாமல் ராஜபக்சவின் பங்களிப்பும் உள்ளது. எனவே, அமைச்சு பதவி பெறுவதற்கு அவர் தகுதியானவர்.”
இவ்வாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மதுர விதானகே தெரிவித்தார் .
இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,
” இலங்கை கிரிக்கெட் அணியின் எழுச்சியென்பது ஒரே நாளில் ஏற்பட்டது அல்ல. விளையாட்டுத்துறை அமைச்சராக இருந்த நாமல் ராஜபக்ச இரண்டு வருடங்களாக பெரும்பாடுபட்டார். நிர்வாக திறனின் வெளிப்பாடும் இதில் உள்ளது.
நாமல் ராஜபக்ச விளையாட்டுக்குள் அரசியலை புகுந்தவில்லை. சுயாதீனமாக செயற்பட்டார். திறமையான வீரர்களை ஒரு குடையின்கீழ் கொண்டுவந்தார். உள தைரியத்தை வழங்கினார். எனவே, அமைச்சு பதவியை பெறுவதற்கு அவர் எல்லா விதத்திலும் தகுதியானவர்.” – என்றார்.
#SriLankaNews
Leave a comment