sri lanka 58768
இலங்கைசெய்திகள்

போக்குவரத்தில் விசேட திட்டம்!

Share

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நிறைவடைவதற்கு முன் பொதுப் போக்குவரத்தில் விசேட வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன இதனை தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் உள்ள நிலையில் மீண்டும் நாட்டை திறக்க முன்னர் பொதுப் போக்குவரத்தில் தீர்மானமிக்க வேலைத்திட்டம் கொண்டுவரப்பட வேண்டும்.

நாட்டில் தொற்று வேகமாக பரவ பொதுப்போக்குவரத்து சேவையே முக்கிய பங்கு வகிக்கின்றது. இதனால் நாடு மீளத் திறந்த பின் தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் இந்த செயற்பாடு அமைய வேண்டும்.

நாட்டை திறப்பதற்கு முன்னர் இந்தச் செயற்பாட்டை நடைமுறைப்படுத்தினால் தொற்றின் எண்ணிக்கையை குறைக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...