இலங்கைசெய்திகள்

நிலக்கடலை இறக்குமதி தொடர்பில் பணிப்புரை

tamilni 357 scaled
Share

நிலக்கடலை இறக்குமதி தொடர்பில் பணிப்புரை

நிலக்கடலை அறுவடை சந்தைக்கு வெளியிடப்படுவதற்கு முன்னர் 2000 மெற்றிக் தொன் நிலக்கடலையை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி அனுப்பியுள்ள கடிதத்தின் பிரகாரம் 2000 மெற்றிக் தொன் நிலக்கடலை கையிருப்பு பெப்ரவரி மாத நடுப்பகுதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2022/23 உயர் பருவம் மற்றும் 2023 இளவேனிற் பருவத்தில் நிலக்கடலை அறுவடை போதுமானதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் போதிய நீர் வசதிகள் இன்மை மற்றும் உரங்கள் பயன்படுத்தப்படாமை காரணமாக 50 முதல் 55 சதவீதம் வளர்ச்சி சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சின் செயலாளரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, உடனடியாக 2000 மெற்றிக் தொன் நிலக்கடலையை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிலக்கடலைக்கு மேலதிகமாக 1000 மெற்றிக் தொன் உழுந்து மாவையும் இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சின் செயலாளர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளார்.

Share
Related Articles
8 10
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்றத்தில் இருந்து அதிரடியாக வெளியேற்றப்பட்ட அர்ச்சுனா

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்காக நாடாளுமன்ற...

10 10
இலங்கைசெய்திகள்

ரணிலின் வெளிநாட்டு பயணங்களால் ஏற்பட்ட செலவு : அமைச்சர் வெளியிட்ட தகவல்

ஜனாதிபதியாக இருந்த காலத்தில் வெளிநாட்டு சுற்றுப்பயணங்களுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1.27 பில்லியன் ரூபா...

6 11
உலகம்செய்திகள்

காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் அத்துமீறி தாக்கியதில் 13 இந்தியர்கள் பலி

காஷ்மீர்(Kasmir) மாநிலம் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் 13 இந்தியர்கள் உயிரிழந்துள்ளனர்....

9 10
இலங்கைசெய்திகள்

விமான சேவையை நிறுத்தும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்

இந்தியா – பாகிஸ்தான் போர் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கான விமான சேவைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதாக...