tamilni 357 scaled
இலங்கைசெய்திகள்

நிலக்கடலை இறக்குமதி தொடர்பில் பணிப்புரை

Share

நிலக்கடலை இறக்குமதி தொடர்பில் பணிப்புரை

நிலக்கடலை அறுவடை சந்தைக்கு வெளியிடப்படுவதற்கு முன்னர் 2000 மெற்றிக் தொன் நிலக்கடலையை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு விவசாய மற்றும் பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.

அமைச்சின் செயலாளர் ஜனக தர்மகீர்த்தி அனுப்பியுள்ள கடிதத்தின் பிரகாரம் 2000 மெற்றிக் தொன் நிலக்கடலை கையிருப்பு பெப்ரவரி மாத நடுப்பகுதிக்கு முன்னர் இறக்குமதி செய்யப்பட வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2022/23 உயர் பருவம் மற்றும் 2023 இளவேனிற் பருவத்தில் நிலக்கடலை அறுவடை போதுமானதாக தெரிவிக்கப்பட்டிருந்த போதிலும் போதிய நீர் வசதிகள் இன்மை மற்றும் உரங்கள் பயன்படுத்தப்படாமை காரணமாக 50 முதல் 55 சதவீதம் வளர்ச்சி சதவீதம் குறைந்துள்ளதாக அமைச்சின் செயலாளரின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, உடனடியாக 2000 மெற்றிக் தொன் நிலக்கடலையை இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், நிலக்கடலைக்கு மேலதிகமாக 1000 மெற்றிக் தொன் உழுந்து மாவையும் இறக்குமதி செய்வதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறும் அமைச்சின் செயலாளர் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளருக்கு அறிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 82
செய்திகள்உலகம்

செல்லப் பிராணிக்காக வேலையைத் துறந்து சட்டம் பயின்ற சீனப் பெண்!

சீனாவின் பீஜிங் நகரைச் சேர்ந்த லீ யிஹான் (Li Yihan) என்ற பெண், விஷம் கலந்த...

Untitled 81
செய்திகள்இலங்கை

எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை போராட்டம்: பெட்ரோல், டீசல் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட வாய்ப்பு!

பல்வேறு தீர்க்கப்படாத கோரிக்கைகளை முன்வைத்து, நாடு முழுவதுமுள்ள எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை (ஏப்ரல் 06,...

Untitled 80
உலகம்செய்திகள்

பிடிபட்ட அமெரிக்க விமானி குறித்து ஈரான் நெகிழ்ச்சி அறிக்கை: “கைதி அல்ல, எமது நாட்டின் விருந்தினர்!”

வளைகுடா பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், ஈரானியப் படைகளால் சிறைபிடிக்கப்பட்ட அமெரிக்க விமானி...

Untitled 79
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மட்டக்களப்பில் அதிரடி: நவீன ஸ்கேனருடன் புதையல் தோண்டிய இரு பெண்கள் உட்பட 11 பேர் கைது!

மட்டக்களப்பு, வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திக்கோடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட...