palitha
அரசியல்இலங்கைசெய்திகள்

ஐதேக தலைமையில் மாபெரும் கூட்டணி!!

Share

ஐக்கிய தேசியக் கட்சியை பிளவுபடுத்தியவர்கள் பிழைக்க மாட்டார்கள் என்று கணித்திருந்ததாக தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார, ஐக்கிய தேசியக் கட்சி மாபெரும் அரசியல் கூட்டணியை அமைக்கும் என்ற அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவின் கருத்தை உறுதிப்படுத்தினார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே மேற்குறிப்பிட்ட விடயத்தை அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தி பல அணிகளாக பிளவுபட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளதாக கூறிய அவர், ராஜித குழு, பொன்சேகா குழு மற்றும் சமீபத்தில் மயந்த குழு என பிளவுபட்டுள்ளதாகவும் முடிந்தால் இந்த குழுக்களை  ஒன்றிணைத்து காட்டுமாறு சஜித் பிரேமதாஸவுக்கு சவால் விடுவதாகவும் குறிப்பிட்டார்.

எதிர்வரும் காலங்களில் ஐக்கிய மக்கள் சக்தி, ஸ்ரீலங்கா பொதுஜனபெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த எம்.பிக்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் மாபெரும் கூட்டணியில் இணையவுள்ளதாக அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ அண்மையில் பதுளையில் தெரிவித்த கருத்தையும் ரங்கே எம்.பி உறுதிப்படுத்தினார்.

அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற தெரிவுக் குழுவின் தலைவர் பதவியில் இருந்து விலகுமாறு, அக்கட்சியின் எம்.பியான மயந்த திஸாநாயக்கவுக்கு மற்றுமொரு சிரேஷ்ட எம்.பி ஊடாககட்சித் தலைமை அழுத்தம் கொடுத்துள்ளதாக ரங்கே பண்டார சுட்டிக்காட்டினார்.

குறித்த குழுவின் முன்னாள் தலைவர் கலாநிதி ஹர்ஷ டி சில்வாவை மீண்டும் அப்பதவிக்கு நியமிப்பதை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முதலில் தடுக்க விரும்பினார் என்றும்
ஹர்ஷ சில்வாவை மகிழ்விப்பதற்காகவே அவர் திஸாநாயக்கவை பதவி விலகுமாறு கூறியிருந்தார் என்றும் ரங்கே எம்.பி சுட்டிக்காட்டினார்.

சில்வா மற்றும் திஸாநாயக்க ஆகிய இருவரையும் பிரேமதாசவால் கட்டுப்படுத்த முடியவில்லை என்று தெரிகிறது என்றும் ஐக்கிய மக்கள் சக்தி பல பிரிவுகளாக பிளவுபட்டுள்ளமை வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
kurunagale
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யப் பெண்ணின் 3 இலட்சம் பெறுமதியான தொலைபேசி திருட்டு: உனவட்டுனவில் ஒருவர் கைது!

வெளிநாட்டுப் பெண்ணிடம் தொலைபேசி திருடிய குற்றச்சாட்டில் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். ரஷ்ய நாட்டுப் பெண் ஒருவரிடமிருந்தே...

articles2FzfwGOGwTVgau0U5wzDGJ
செய்திகள்உலகம்

பாகிஸ்தானில் பிரிவினைவாதிகள் நடத்திய கோரத் தாக்குதல்: உயிரிழப்பு 193 ஆக அதிகரிப்பு!

பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள 12 நகரங்களில் நேற்று (31) பலூச் விடுதலை இராணுவத்தைச் சேர்ந்த...

nipah scare kyrgyzstan bans animal products imports from v0 KAIhqUTvKj
செய்திகள்உலகம்

இந்திய இறைச்சி மற்றும் விலங்குப் பொருட்களுக்கு கிர்கிஸ்தான் தடை: நிபா வைரஸ் அச்சமே காரணம்!

இந்தியாவில் நிபா (Nipah) வைரஸ் பரவல் நிலவுவதாகக் கூறி, அங்கிருந்து இறக்குமதி செய்யப்படும் இறைச்சி மற்றும்...

image cb55c225d6
செய்திகள்இலங்கை

சந்தையில் எகிறியது இஞ்சியின் விலை: ஒரு கிலோ 2,000 ரூபாவைத் தாண்டியது!

இலங்கையின் உள்ளூர் சந்தைகளில் இஞ்சியின் விலை முன்னெப்போதும் இல்லாத வகையில் சடுதியாக உயர்வடைந்துள்ளதாக நுகர்வோரும் வியாபாரிகளும்...