12 24
இலங்கைசெய்திகள்

அரச எம்.பியின் வாகனத்தில் மாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட புல் :ஆரம்பமானது விசாரணை

Share

அரச எம்.பியின் வாகனத்தில் மாடுகளுக்கு கொண்டு செல்லப்பட்ட புல் :ஆரம்பமானது விசாரணை

தேசிய மக்கள் சக்தி(npp) தலைமையிலான அரசாங்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள ஒருவருக்கு வழங்கப்பட்ட வாகனத்தில் மாடுகளுக்கு புல் கொண்டு செல்லப்பட்டதாக வெளியான புகைப்படங்களை அடுத்து விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த வாகனம் சுற்றுலா பிரதியமைச்சர் ருவன் ரணசிங்கவின்(Ruwan Ranasinghe) பிரத்தியேக செயலாளரினால் பெறப்பட்டு பதுளை(badulla) மாவட்டத்தில் உள்ள தேசிய மக்கள் சக்தி எம்.பி ஒருவருக்கு வழங்கப்பட்டதாகதகவல் வெளியாகி இருந்தது

விலங்குகளுக்கு தேவையான புல் இந்த வாகனம் மூலம் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இவ்வாறு அரசாங்கத்திற்கு சொந்தமான வாகனத்தில் மாடுகளுக்கு புல் கொண்டு செல்லப்பட்டதா என்பது தொடர்பான விசாரணை அறிக்கையை வெளிநாட்டு அலுவல்கள்,வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறையின் கட்டுப்பாட்டாளர் ஜெனரல் அலுவலகம் கோரியுள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...