13 21
இலங்கைசெய்திகள்

அநுர அரசின் இரட்டை வேடம் : அம்பலப்படுத்திய ஆசிரிய சங்கம்

Share

அநுர அரசின் இரட்டை வேடம் : அம்பலப்படுத்திய ஆசிரிய சங்கம்

மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 6 சதவீதத்தை ஒதுக்க வேண்டும் என்று முன்னைய அரசுகளை வற்புறுத்திய தேசிய மக்கள் சக்தி, தற்போது ஆட்சிக்கு வந்த நிலையில் போர் இல்லாத போது பாதுகாப்புச் செலவை அதிகரித்தது ஏன் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது,

கல்விக்காக அரசாங்கம் 271 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள அதேவேளை, பாதுகாப்பிற்காக 614 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு அமைச்சின் மூலதனச் செலவு 76 பில்லியன் ரூபாவாகும் .

அதேவேளை கல்விக்கான மூலதனச் செலவு 65 பில்லியன் ரூபாவாகும் எனத் தெரிவித்த அவர், கல்விக்காக அதிகளவு நிதி ஒதுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.

2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்கு 6% மற்றும் 3% ஒதுக்குமாறு கோரி பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் அண்மையில் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றை நடத்தியது.

வற் வரியை நீக்க வேண்டும், பாடசாலை உபகரணங்கள், சீருடைகள், புத்தகங்களின் விலையை குறைக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகள் இதன்போது வலியுறுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...