17 21
இலங்கைசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மனு : பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவுள்ள உயர்நீதிமன்றம்

Share

புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மனு : பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவுள்ள உயர்நீதிமன்றம்

2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் மற்றும் வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவதைத் தடுக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமைகள் மனுவை, நவம்பர் 18 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

 

2024 ஆம் ஆண்டு 05 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் சில கேள்விகள் கசிந்ததாகக் கூறப்படும் 01 ஆம் இலக்க வினாத்தாள் செல்லுபடியற்றதாக ஆணை பிறப்பிக்கப்பட வேண்டுமெனவும், மீண்டும் பரீட்சையை நடத்துமாறும் மனுதாரர்கள் தமது மனு மூலம் உயர்நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

இந்த மனு நேற்று (24) நீதியரசர் அர்ஜுன ஒபேசேகர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

 

இந்தநிலையில், குறித்த மனு மீதான ஆட்சேபனைகளை நவம்பர் 5ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும், அது தொடர்பான மேலும் ஆட்சேபனைகள் இருப்பின் நவம்பர் 12ஆம் திகதிக்குள் சமர்ப்பிக்குமாறும் நீதியரசர் உத்தரவிட்டுள்ளார்.

 

அதன்படி, மனுவில் உள்ள உண்மைகளை உறுதி செய்யும் வகையில், மனுவின் அடுத்த விசாரணை நவம்பர் 18ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

2024 ஆம் ஆண்டு செப்டெம்பர் 15 ஆம் திகதி நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றிய பல மாணவர்களின் பெற்றோர்களினால் இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Share
தொடர்புடையது
17509128871
சினிமாசெய்திகள்

12 வயதில் கண்ட கனவு… 72வது வயதில் நனவானது..! வெளியானது வைரமுத்துவின் புதிய முயற்சி!

கவிஞர் வைரமுத்து தனது ஆயுள் முழுக்க விரைந்து ஓடிய கனவுகளை, எழுத்து மூலம் உலகிற்கு அளித்து...

17509267851
சினிமாசெய்திகள்

“Code Word” எதற்காக? நடிகர் கிருஷ்ணாவின் ரகசிய மெசேஜ் விவகாரம் பொலீஸார் பிடியில்!

தமிழ் திரைத்துறையை அதிர்ச்சி அடையவைத்த போதைப்பொருள் வழக்குகள் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரவிக்கொண்டே இருக்கின்றன. சமீபத்தில்...

17509373351
சினிமாசெய்திகள்

போதைப்பொருள் விவகாரத்தில் நடிகர்களை கேள்விக்குள்ளாக்கிய மாரி செல்வராஜ்! வைரலான வீடியோ..

தமிழ் திரைப்பட உலகம், சமீப காலமாக போதைப்பொருள் தொடர்பான கடுமையான சிக்கல்களால் பெரும் அதிர்ச்சியிலும் பரபரப்பிலும்...

21 4
இலங்கைசெய்திகள்

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் மீதான தாக்குதல்! ஐக்கிய தேசிய கட்சி முன்வைத்துள்ள குற்றச்சாட்டு

கொழும்பு மாநகர சபை உறுப்பினர் சந்தமாலி உலுவிடகே மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக பொலிஸாரின்...