Champika Ranawaka
அரசியல்இலங்கைசெய்திகள்

சொத்துக்களை விற்பதிலேயே அரசு மும்முரம்!!

Share

சர்வதேச நாணய நிதியத்தினால் (IMF) முன்வைக்கப்பட்ட மிக முக்கியமான முன்மொழிவுகளைத் தவிர்த்து, அரசாங்க சொத்துக்களை விற்பனை செய்வதில் மாத்திரமே அரசாங்கம் செயற்பட்டு வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

அரசாங்க முயற்சிகள் தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டால், வலுவான ஒழுங்குமுறை பொறிமுறையும் சில சுயாதீன ஒழுங்குமுறை அதிகாரிகளும் இருக்க வேண்டும் என அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

மூடப்பட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட, தனியார் மயமாக்கப்பட்ட மற்றும் அரச உடமையின் கீழ் தொடர வேண்டிய அரசாங்க முயற்சிகள் முகாமைத்துவ தணிக்கை செயல்முறையின் மூலம் அடையாளம் காணப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் திட்டம் குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்துவது அரசாங்கத்தின் பொறுப்பு என்றும், தொழிற்சங்கங்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் அரசாங்கம் கலந்துரையாடல்களை மேற்கொள்ள வேண்டும்.

“IMF வலியுறுத்துவது போல், அரசாங்கத்தின் கொள்முதல் செயல்முறை வெளிப்படையானதாக இருக்க வேண்டும், மேலும் அனைத்து விவரங்களும் வெளிப்படுத்தப்பட வேண்டும்,” என அவர் .மேலும் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
istockphoto 464705134 612x612 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வீதிகளில் ரேஸ் செல்லும் இளைஞர்களுக்கு எச்சரிக்கை: மோட்டார் சைக்கிள்களை அரசுடைமையாக்க பொலிஸ் மா அதிபர் உத்தரவு!

பிரதான வீதிகளில் பாதுகாப்பற்ற முறையில் மோட்டார் சைக்கிள்களை செலுத்தும் அனைத்து நபர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு...

rfv 1 10d
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தேர்தலை நடத்தாமல் இருப்பதை ஏற்க முடியாது: யாழில் தமிழ் கட்சிகள் கூடிப் பேச்சு!

மாகாண சபைத் தேர்தல் முறைமை மறுசீரமைக்கப்பட வேண்டும் என்பதற்காக தேர்தலையே நடத்தாமல் இருப்பது எந்த காலத்திலும்...

download 2026 01 20T171116.980
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அபிவிருத்தியில் பாகுபாடு: மன்னார் பிரதேச சபையிலிருந்து 6 உறுப்பினர்கள் வெளிநடப்பு!

மன்னார் பிரதேச சபையின் 8 ஆவது அமர்வு நேற்றுமுன்தினம் (19) இடம் பெற்ற போது இலங்கைத்...

26 696e81aa1ff67
செய்திகள்இலங்கைபிராந்தியம்

திருகோணமலை சிலை விவகாரம்: சிறையிலுள்ள சக பிக்குகளை கஸ்ஸப தேரர் அச்சுறுத்துவதாகத் தகவல்!

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகப் புத்தர் சிலையை நிறுவிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள பலாங்கொடை கஸ்ஸப...