3 11 scaled
இலங்கைசெய்திகள்

தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

Share

தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்

வெளிநாடு செல்ல எதிர்பார்த்திருக்கும் வைத்திய அதிகாரிகளை தக்கவைத்துக் கொள்வதற்கு அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை அறிவித்துள்ளது.

மூளை வடிகால் பற்றிய அழுத்தமான பிரச்சினைக்கு சுகாதார அமைச்சகம் பாராமுகம் காட்டுவதாக அந்த சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

இந்த நிலையில், நவம்பர் 1ஆம் திகதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை, முக்கியஸ்தர்களின் சுகாதாரப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கான நடமாடும் நோயாளர் காவு வாகனச் சேவைகளில் இருந்து விலக தீர்மானித்துள்ளது.

மேலும்,மறு அறிவிப்பு வரும்வரை வைத்தியசாலை கடமைகளுக்கு வெளியே திட்டமிடப்பட்ட நடமாடும் வைத்திய முகாம் உட்பட அதனுடன் தொடர்புடைய பிற கடமை நடவடிக்கைகளில் இருந்து விலகவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் முடிவு செய்துள்ளது.

அத்துடன் நவம்பர் 1ஆம் திகதிக்கு பின்னர் மாகாண அளவிலான தொழிற்சங்க நடவடிக்கையைத் தொடங்கப் போவதாகவும் சங்கம் எச்சரித்துள்ளது.

Share
தொடர்புடையது
ஹட்டன் கல்வி வலயம்
இலங்கை

ஹட்டன் கல்வி வலயம் வெளியிட்டுள்ள தகவல்.

சீரற்ற வானிலை பாதிப்பை கருத்திற் கொண்டு நேற்று முன்தினம் முதல் ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளுக்கு...

ஹர்ஷ சுரங்க பெர்னாண்டோ
இலங்கை

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநர் பதவியேற்பு!

ஜனாதிபதி செயலகத்தில், மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற சமூக மருத்துவ நிபுணர் ஹர்ஷ...

அகில விராஜ் காரியவசம் 2
இலங்கை

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர்!

  வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்னிலையான நிலையில் முன்னாள் அமைச்சர் அகில விராஜ்...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாள
இலங்கை

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுச் செயலாளர்.

இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி, இன்று பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை கொழும்பில்...