எரிபொருள் விலையை அதிகரித்து இலாபம் ஈட்டுகிறது அரசு!

Anantha Palitha

எரிபொருட்களின் விலையை அதிகரித்ததன் மூலம் கொள்ளை இலாபத்தை அரசாங்கம் பெற்றுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் செயற்பாட்டாளர் ஆனந்த பாலித்த இதனை தெரிவித்துள்ளார்.

மசகு எண்ணெய்யை இறக்குமதி செய்யாமல் சுத்திகரிக்கப்பட்ட எரிபொருளை இறக்குமதி செய்தமையால், எரிபொருட்களின் விலை உயர்வு அதிகரிக்கப்பட்டது.

சர்வதேச சந்தையில் எரிபொருளின் விலை 20 சதவீதத்தினால் குறைந்துள்ளது.

எனினும் அரசு இலங்கையில் எரிபொருட்களின் விலையை அதிகரித்துள்ளது. இதன் மூலம் பெற்றோல், ஒக்டைன் 92 ரகத்தின் லீற்றர் ஒன்றில் அரசாங்கத்திற்கு 65 ரூபா தேறிய இலாபமாக கிடைக்கின்றது.

ஒக்டேயின் 95இல் 93ரூபாய் இலாபமாக கிடைக்கின்றது. சுப்பர் டீசலில் 48 ரூபாய் இலாபமாக கிடைக்கின்றது.

எரிபொருட்களின் விலை அதிகரிப்பால், மக்களின் அன்றாட அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

#SrilankaNews

Exit mobile version