2 36
இலங்கைசெய்திகள்

அரச ஊழியர்களின் சம்பளத் தொகை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Share

அரச ஊழியர்களின் சம்பளத் தொகை தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்புக்கு அரசாங்கம் 325 பில்லியன் ரூபா தொகை செலவிடும் என்று வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வங்குரோத்து நிலைக்குச் சென்ற நாடொன்று, அதிலிருந்து மீண்டு தாக்கல் செய்யும் முதலாவது வரவு செலவுத் திட்டம் இதுவாகும்.

அதனூடாக இந்த அளவுக்கு அரச சேவையில் சம்பள உயர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, 2025 ஆம் ஆண்டில் 102 பில்லியன் ரூபாவும், 2026 ஆம் ஆண்டில் 128 பில்லியன் ரூபாவும், 2027 ஆம் ஆண்டில் 95 பில்லியன் ரூபாவும் செலவிடப்படும்.

அதன்படி, இந்த சம்பள அதிகரிப்புக்காக மொத்தம் 325 பில்லியன் ரூபாவை அரசாங்கம் செலவிடப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...