24 3
இலங்கைசெய்திகள்

அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

Share

அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவு தொடர்பில் ரணில் வெளியிட்ட தகவல்

அரச சேவையின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளை அதிகரிப்பதற்கான நிபுணர் குழுவின் பரிந்துரைகள் நிதி அமைச்சின் ஊடாக நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டின் அனைத்து குடிமக்களின் வருமானத்தையும் அதிகரிக்க வேண்டும் என்பதே தனது விருப்பம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு மானிய வட்டியில் வீட்டுக்கடன் வழங்குவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்காலத்தில் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில் அரசாங்க சொத்துக்களை உள்ளடக்கி புதிய முதலீட்டு நிறுவனம் உருவாக்கப்படவுள்ளதுடன் அதற்கான புதிய சட்டங்களும் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார்.

சொத்துக்களை உருவாக்கும் புதிய முதலீடுகளை குறிப்பிடுவதுடன் முறையான ஓய்வூதிய திட்டமிடல் முறையை நடைமுறைப்படுத்த முடியும் என்றும் ஜனாதிபதி கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...

face book
இலங்கை

முகநூலால் சீரழிந்த வாழ்க்கை!

இந்த வருடம், கதிர்காமம் பாதயாத்திரை சென்ற சுப்பிரமணி என்ற நாயைத் தாக்கிய சம்பவம் சமூக ஊடகங்களில்...

suicide
இலங்கை

தன்னைத்தானே சுட்டு கொண்ட காவல் அதிகாரி!

பாணத்துறை வலான ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் தனது சேவைத் துப்பாக்கியால்...

jail sentence
இலங்கை

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருக்கு சிறைத்தண்டனை.

ஐக்கிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை...