24 6661451fda498
இலங்கைசெய்திகள்

செயழிலந்து காணப்படும் அரசாங்க தொலைபேசிகள்

Share

செயழிலந்து காணப்படும் அரசாங்க தொலைபேசிகள்

பல அரசாங்க தொலைபேசி சேவைகள் செயல்படாத நிலையில் இருப்பதாக விசாரணை ஒன்றில் தெரியவந்துள்ளது.

அறுபத்தைந்துக்கும் மேற்பட்ட 4-இலக்க தொலைபேசி எண்கள் மற்றும் மற்றும் சில ஐந்து இலக்க தொலைபேசி சேவைகளை அழைக்கும்போது அவற்றில் பதில் இல்லாத காரணத்தாலும், இணைப்பு இல்லாததாலும், சில சேவைகள் 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் நேரமும் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, 65 தொலைபேசி சேவைகளில் 40 சதவீதம் பதிலளிக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

ஆய்வுக்குட்படுத்தப்பட்ட எழுபது எண்களில், 11 தொலைபேசி எண்கள் இணைக்கப்படவில்லை என்றும் 6 முகவர்கள் பதிலளிக்க முடியாது என்று அழைப்பாளருக்குத் தானாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சில சேவைகள் 3 முயற்சிகளின் போது மற்றொரு சேவையில் இருப்பதாகவும் 10 நிமிடங்களுக்கு மேல் காத்திருக்கும் நேரம் இருந்ததாகவும் ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கைதொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைக்குழுவின் (TRCSL) அதிகாரிகள், ஒவ்வொரு வருடமும் 3 மற்றும் 4 இலக்க சுருக்கக் குறியீடுகளுக்கான சேவைகளை கண்காணிப்பதாகவும், அவை குறைவாகப் பயன்படுத்தப்பட்டால், சம்பந்தப்பட்ட அமைப்பிடம் நியாயப்படுத்துமாறு கோருவதாகவும் தெரிவித்தனர்.

“சில தொலைபேசி எண்கள் கட்டணம் செலுத்தவில்லை என்றாலும் அவை தொழிற்படாமல் போகலாம்” என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Share
தொடர்புடையது
வீட்டிலிருந்து மீட்கப்பட்ட சடலங்கள் 1
இலங்கை

விசாரணை கைதிகளாக இருந்த 552 பேர் மரணம் – சிறைச்சாலைகள் திணைக்களம் சமர்ப்பித்துள்ள அறிக்கை.

கடந்த ஐந்து ஆண்டுகளில் 1021 சிறைக் கைதிகள் உயிரிழந்துள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில்...

Court order
இலங்கை

ரகித ராஜபக்சவிற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.

ரகித ராஜபக்ச உள்ளிட்ட குழுவினரை பிணையில் செல்ல கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது....

esala
இலங்கை

கலாசார நிகழ்வுகளில் பாதாள உலக கும்பலின் தலையீடுகள்.

இன்றைய தினம், வரலாற்றுச் சிறப்புமிக்க தெவிநுவர ஸ்ரீ உத்பலவர்ண ஸ்ரீ விஷ்ணு மகா தேவாலயத்தின் வருடாந்த...

Arrested With 1
இலங்கை

பல குற்றச்செயல்களுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஐஸ் போதைப்பொருளுடன் கைது.

  மேல் மாகாணத்தில் இடம்பெற்ற கொலை முயற்சி மற்றும் துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தி மிரட்டிய சம்பவங்கள்...