கோட்டாவின் விளக்க உரை ஏற்புடையதல்ல- ஐ.ம.ச விசனம்!

LakshmanKiriella

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் கொள்கை விளக்க உரை ஏற்புடையதாக இல்லை – என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பனர் லக்‌ஷ்மன் கிரியல்ல தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

” நாட்டில் தற்போது பல பிரச்சினைகள் உள்ளன. விவசாயிகளுக்கு உரம் இல்லை. எரிபொருள் தொடர்பிலும் நெருக்கடி நிலை தொடர்கின்றது. மக்களின் வாழ்க்கை சுமை அதிகரித்துள்ளது.

இவற்றுக்கு என்ன தீர்வு என்பதையே ஜனாதிபதி உரைமூலம் எதிர்ப்பார்த்தோம். ஆனால் நடப்பு விவகாரங்களை ஜனாதிபதி கருத்திற்கொள்ளவில்லை. அந்தவகையில் அவரின் கொள்கை விளக்க உரையும் தோல்வி. நாம் ஆதரவு வழங்கமுடியாது.

எல்லா விடயங்களுக்கும் கொரோனாமீது பழிசுமத்த முடியாது. கொரோனாவுக்கு மத்தியிலும் எமது அயல் நாடுகளின் அந்நிய செலாவணி கையிருப்பும், பொருளாதார வளர்ச்சியும் அதிகரித்துள்ளது.

முறையற்ற நிர்வாகத்தால் தான் நாம் முன்னேறாமல் உள்ளோம்.” – என்றும் கிரியல்ல குறிப்பிட்டார்.

#SrilankaNews

Exit mobile version