கோட்டா - வஜிர இரகசியப் பேச்சு
இலங்கைசெய்திகள்

கோட்டா – வஜிர இரகசியப் பேச்சு

Share

கோட்டா – வஜிர இரகசியப் பேச்சு

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்த்தன எம்.பியும் விமான நிலையத்தில் இரகசியக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் என்று செய்தி வெளியாகியுள்ளது.

கோட்டாபய ராஜபக்ச கம்போடியாவுக்கான இரண்டு வார யாத்திரையை முடித்துவிட்டு கடந்த வாரம் சிங்கப்பூர் எயார் லைன்ஸ் விமானத்தின் ஊடாக இலங்கை திரும்பினார்.

அப்போது அதே விமானத்தில் வஜிர அபேவர்த்தனவும் வந்திருந்தார். அவர் சிகிச்சை ஒன்றுக்காகச் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார். அவர்கள் இருவரும் விமானத்தில் ஒன்றாகவே இலங்கை வந்தனர்.

அவர்கள் இருவரும் விமானத்தில் ஏறுவதற்கு முன்பும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இறங்கிய பின்பும் இரகசியக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர் என்று தெரியவந்துள்ளது.

இருப்பினும் கலந்துரையாடல் தொடர்பான உத்தியோகப்பூர்வ செய்தி இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
vellam
இலங்கை

மீண்டும் வெள்ளத்தில் மூழ்கிய வீடுகள் – கவலையில் மக்கள்

ஹட்டன் – டிக்கோயாவில் பல குடியிருப்புகள் மற்றும் தாழ் நிலப் பகுதிகள், மத்திய மலைநாட்டில் பெய்து...

பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...