சுசிலை பதவி நீக்கிய கோட்டா: தொலைபேசியில் பேசிய மகிந்த!

Susil and mahinda

பதவி நீக்கம் செய்யப்பட்ட சுசில் பிரேமஜயந்தவுடன், பிரதமர் மகிந்த ராஜபக்ஸ கலந்துரையாடியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்கஸவினால் அமைச்சுப் பதவியிலிருந்து நேற்று நீக்கியிருந்தார்.

பதவி நீக்கப்பட்டதன் பின்னர், பிரதமர் தம்மை தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடியதாக சுசில் பிரேம ஜயந்த தகவல் வெளியிட்டுள்ளார்.

சுசில் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக நேற்று மாலை முறைப்படி எழுத்து மூலம் அவருக்கு அறிவிக்கப்பட்டதாகத் தெரியவந்துள்ளது.

நேற்றைய தினம் பதவி நீக்கம் செய்யப்பட்ட சுசில், தனது அரசியலுக்குக் கிடைத்த ஆசீர்வாதமாகவும், புதிய பயணத்தை ஆரம்பிக்கப் போவதாகவும் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

#SrilankaNews

Exit mobile version