gota
அரசியல்இலங்கைசெய்திகள்

நாட்டை வந்தடைந்தார் கோட்டா!!

Share

மக்கள் எதிர்ப்பு அலையால் நாட்டைவிட்டு ஓடிய இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச நாடு திரும்பினார்.

நேற்றிரவு 11.45 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையம் வந்தடைந்த கோட்டாபய, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில் கொழும்பு – 07 இல் உள்ள வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

கோட்டாவின் வருகையை முன்னிட்டு கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நாட்டில் மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் ஜுலை 09 ஆம் திகதி ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்டு, அதனை போராட்டக்காரர்கள் கைப்பற்றினர்.

இதனையடுத்து பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த கோட்டாபய ராஜபக்ச, ஜுலை 13 ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறினார்.

மாலைதீவு சென்றடைந்த அவர், அங்கு ஒரு நாள் தங்கிய பின்னர் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூரில் இருந்து ஜுலை 14 இல் பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார். சிங்கப்பூரில் இருந்து தாய்லாந்து சென்ற அவர், அங்கிருந்தே நேற்றிரவு நாடு திரும்பினார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
world 60
செய்திகள்அரசியல்இலங்கை

செயற்கை நுண்ணறிவு எதிர்காலத்தை கொள்கை மற்றும் அறநெறிகளுடன் வடிவமைக்க வேண்டும்: பிரதமர் ஹரினி அமரசூரிய வலியுறுத்தல்

இலங்கை வெறுமனே செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக் கொள்வதை விடுத்து, வலுவான கொள்கை,...

world 59
செய்திகள்உலகம்

டெனரிஃப் தீவை வந்தடையும் சொகுசுக் கப்பலில் ஹன்டா வைரஸ் பரவல்: ஐரோப்பிய நாடுகள் அவசர வெளியேற்ற நடவடிக்கை

‘எம்வி ஹோண்டியஸ்’ (MV Hondius) என்ற சொகுசுக் கப்பலில் பரவி வரும் கொடிய ஹன்டா வைரஸ்...

world 58
செய்திகள்இந்தியா

தமிழக முதலமைச்சர் விஜய் அதிரடி அறிவிப்பு: மாநில நிதிநிலை குறித்து விரைவில் ‘வெள்ளை அறிக்கை’ வெளியீடு

தமிழகத்தின் புதிய முதலமைச்சராக இன்று (மே 10) பதவியேற்றுக்கொண்ட சி. ஜோசப் விஜய், தனது முதல்...

world 57
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின் கட்டண உயர்வு: தரமற்ற நிலக்கரி இறக்குமதி சுமையை மக்கள் மீது சுமத்த வேண்டாம் என சஜித் பிரேமதாச வலியுறுத்தல்

அரசாங்கத்தினால் அண்மையில் அறிவிக்கப்பட்ட மின்சாரக் கட்டண உயர்வு, தரமற்ற நிலக்கரி இறக்குமதியினால் ஏற்பட்ட நட்டத்தை மின்...