image 2cc098f0b2
அரசியல்இந்தியாஇலங்கைசெய்திகள்

கோபால் பாக்லே – தேரர்கள் சந்திப்பு

Share

இந்திய – இலங்கை மக்களின் நலனுக்காகவும் அவர்களிடையிலான சகோதரத்துவ உறவுக்காகவும் மல்வத்து மற்றும் அஸ்கிரிய பீடங்களின் சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்களிடம் உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே ஆசி பெற்றிருந்தார்.

இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் டுவிட்டர் பதிவிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டிருந்தது.

புதுடெல்லியில் ஏப்ரல் 20ஆம் திகதி நடைபெற்ற 2023 உலக பௌத்த மாநாட்டின் ஆரம்ப உரையில் பிரதமர் நரேந்திர மோடி, சுட்டிக்காட்டிய புத்தபெருமானின் போதனைகளுக்கு அமைவாக, அனைவரினதும் நலன்களுக்காக பிரதமர் நரேந்திர மோடியின் தலைமைத்துவத்தின் கீழ் இந்தியாவால் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை பாராட்டிய சங்கைக்குரிய இரு சிரேஸ்ட தேரர்களுக்கும் உயர் ஸ்தானிகர் நன்றியினைத் தெரிவித்திருந்தார்.

இரு நாடுகளினதும் மக்களுக்காக கலாசாரத்துறைசார் மேலதிக ஒத்துழைப்பு மற்றும் மேம்பட்ட தொடர்புகள் மூலமான நன்மைகள் குறித்தும் இச்சந்தர்ப்பத்தில் கலந்துரையாடப்பட்டதாக அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

image 9ff595f404 image 21ef981081 1

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
30 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரியாத் மற்றும் டுபாய்க்கான விமான சேவைகளை மீண்டும் ஆரம்பிக்கிறது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்!

மத்திய கிழக்கில் நிலவும் மோதல் நிலைமைகளுக்கு மத்தியில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த ரியாத் மற்றும் டுபாய்க்கான தினசரி...

29 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

சர்வதேச பொருளாதார சவால்களை எதிர்கொள்ள இலங்கை தயார்: மத்திய வங்கி ஆளுநர் நந்தலால் வீரசிங்க நம்பிக்கை

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வு...

23 4
செய்திகள்இலங்கை

தமிழக சட்டமன்ற தேர்தல்: தவெக-அதிமுக கூட்டணி குறித்து வெளியாகும் பரபரப்பு தகவல்கள்

தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக, நடிகர் விஜய்யின்...

22 7
செய்திகள்அரசியல்இலங்கை

முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் அடிப்படை உரிமை மனு: விசாரணை வரும் 13-ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது...