12 25
இலங்கைசெய்திகள்

வங்கி கடன்கள் பெற்றுள்ளவர்களுக்கு வெளியான நற்செய்தி

Share

வங்கி கடன்கள் பெற்றுள்ளவர்களுக்கு வெளியான நற்செய்தி

25 மில்லியன் ரூபாவிற்கும் குறைவான கடனைப் பெறுபவர்களில் 99% பேர் வங்கிகளுடன் தங்கள் கடனைப் பற்றி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி பணம் செலுத்தும் திட்டத்தைமொன்றை மேற்கொள்வதற்கு 12 மாத கால அவகாசத்தை அரசாங்கம் வழங்கியுள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, 25 முதல் 50 மில்லியன் ரூபா வரையிலான கடனாளிகளுக்கு 9 மாத கால நீடிப்பும், ஏனைய கடனாளிகளுக்கு 6 மாத கால நீடிப்பும் வழங்கப்பட்டுள்ளது.

பரேட் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் திகதியை ஒத்திவைப்பதற்குப் பதிலாக, இந்த நீண்டகால பிரச்சனைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுகள் காணப்படுவதை உறுதி செய்வதற்காக அரசாங்கம் பங்குதாரர் குழுக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளது.

அத்தோடு, வணிகங்களுக்கு நிவாரணம் என்பது கால நீட்டிப்பு மூலம் மட்டும் அல்ல என்று பொருளாதார அபிவிருத்தி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தால் முன்மொழியப்பட்ட மற்றும் மத்திய வங்கியால் செயல்படுத்தப்பட்ட நிவாரண தொகுதியில், குறைந்த வட்டி விகிதங்கள், திருப்பிச் செலுத்தும் காலத்தை நீட்டித்தல், கடன் மதிப்பீடுகளில் தளர்வு மற்றும் மதிப்பீட்டு சர்ச்சைகளைத் தீர்ப்பதற்கான வெளிப்படையான பொறிமுறையை வழங்குதல் போன்ற பல முக்கியமான நடவடிக்கைகளும் அடங்கும்.

பொருளாதாரத்தில் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் செயலூக்கமான பங்களிப்பை உறுதி செய்வதே இந்த நிவாரண நடவடிக்கைகளின் முக்கிய நோக்கம் என்றும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Share

Recent Posts

தொடர்புடையது
1618851994 heroin boat
செய்திகள்இலங்கை

சீனிகம ஹெரோயின் கடத்தல் வழக்கு: மேலும் மூவர் கைது; 5.4 கிலோ ஹெரோயினும், 10.8 மில்லியன் ரூபா பணமும் பறிமுதல்!

சீனிகமப் பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூன்று பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் மூன்று...

25 690f41c5a622b
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: யாழ்ப்பாணம் மானிப்பாயில் பெண் உட்பட 3 சந்தேகநபர்கள் கைது!

கொழும்பு – கொட்டாஞ்சேனைப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில்,...

25 6906f19b49c03
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பொலனறுவை வெலிகந்தையில் சோகம்: டிரக்டர் மோதி வீதியைக் கடந்த 8 வயது சிறுவன் பலி!

பொலனறுவை, வெலிகந்த – அசேலபுரப் பகுதியில் நேற்று (நவம்பர் 8) இரவு இடம்பெற்ற வீதி விபத்து...

image b8b525779a
உலகம்செய்திகள்

பாகிஸ்தான் – ஆப்கானிஸ்தான் அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி: இஸ்தான்புல் பேச்சுவார்த்தை உடன்பாடின்றி முறிந்தது – அவநம்பிக்கை அதிகரிப்பு!

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் நடந்து வந்த பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான அமைதிப்...