as
அரசியல்இலங்கைசெய்திகள்

“கோட்டா வீட்டுக்கு போ” – வெளிநாடுகளில் திரண்ட இலங்கையர்கள்

Share

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக இன்று ஆர்ப்பாட்டங்களை நடத்தினர்.

இந்த ஆர்ப்பாட்டங்களில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவையும் மற்றும் அரசையும் பதவி விலகுமாறு வலியுறுத்தினர்.

ஆஸ்திரேலியா, பிரிட்டன், அமெரிக்கா, ஜேர்மனி, நியூசிலாந்து, கனடா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இந்த ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.

இதில் கலந்துகொண்ட மக்கள், “கோட்டா வீட்டுக்கு போ” என்ற கோஷத்தையும் எழுப்பினர்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனால், இலங்கை மக்கள் அரசுக்கு எதிராகச் சுயமாகத் திரண்டு போராட்டங்களை நடத்த ஆரம்பித்துள்ளனர்.

இலங்கை மக்களின் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றனர்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
02 29
செய்திகள்இலங்கை

ஈரானுடன் கைக்கோர்க்கும் மைத்திரி: தூதுவர் அலிரேசா டெல்கோஷுடன் திடீர் சந்திப்பு!

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் இலங்கைக்கான ஈரானியத் தூதுவர் அலிரேசா டெல்கோஷ் (Alireza Delkhosh)...

02 28
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மருத்துவர்களுக்குச் சனிக்கிழமை விடுமுறை? – அரசாங்கத்திற்கு மருத்துவ நிபுணர்கள் சங்கம் அவசர கோரிக்கை!

நாட்டில் நிலவி வரும் கடுமையான எரிபொருள் நெருக்கடி மற்றும் அதீத விலை உயர்வு காரணமாகச் சுகாதாரத்...

02 27
செய்திகள்உலகம்

16 வயதிற்குட்பட்டோருக்குச் சமூக ஊடகத் தடை: பிரித்தானியப் பிரபுக்கள் சபையில் மீண்டும் தீர்மானம் நிறைவேற்றம்!

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் முன்மொழிவுக்கு ஐக்கிய இராச்சியத்தின் பிரபுக்கள்...

02 26
செய்திகள்உலகம்

எரிசக்தி ஒத்துழைப்பு: ரஷ்யாவின் உயர்மட்டத் தூதுக்குழு இன்று இலங்கை வருகை!

ரஷ்ய எரிசக்தி பிரதி அமைச்சர் ரோமன் மார்ஷவின் (Roman Marshavin) தலைமையிலான உயர்மட்ட இராஜதந்திரத் தூதுக்குழுவொன்று...