tamilnaadi 55 scaled
இலங்கைசெய்திகள்

பொதுத் தேர்தல் தொடர்பில் ராஜபக்சர்களின் வியூகம்

Share

பொதுத் தேர்தல் தொடர்பில் ராஜபக்சர்களின் வியூகம்

எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டின் பின்னர் பொது தேர்தலுக்கான திகதிகள் அறிவிக்கப்படும் என ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

பல்வேறு சலுகைகள் காரணமாக எதிர்வரும் தேர்தலில் சமகால ஜனாதிபதிக்கு ஆதரவளிப்பதாக அமைச்சர்கள் சிலர் அறிவித்துள்ளனர்.

இருந்த போதிலும், கிராம மட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கருத்து அதுவல்ல என அவர் தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு முடிவடைந்த பின்னர் பொதுத் தேர்தலுக்கான திகதி நிர்ணயம் செய்யப்படும். பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுன பெரும்பான்மையை வெல்லும் என்பதில் உறுதியாக உள்ளோம். பசில் எமது முன்னணியை வழிநடத்த தயாராக உள்ளார்.

அதனை ஏற்றுக் கொண்டவர்கள் எம்முடன் வருவார்கள். பசிலை அழைத்து வருவதற்கு 50க்கும் மேற்பட்ட உறுப்பினர் வந்தார்கள். இது ஒரு நல்ல ஆரம்பம்.

மொட்டு கட்சியில் ரணில் விக்கிரமசிங்க இணைந்து கொண்டால், இரண்டரை லட்சத்தில் 50,000 வாக்குகளை மேலதிகமாக பெற்றுக் கொள்ள முடியும்.

அமைச்சர் பதவியை காப்பாற்ற வேண்டும் என சிலர் முயற்சித்தாலும் கிராம மக்களின் பார்வையாக வேறாகவே உள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...