2 1 4
இலங்கைசெய்திகள்

கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட ஒத்துழைக்க வேண்டும்! ஜீவன் தொண்டமான்

Share

கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட ஒத்துழைக்க வேண்டும்! ஜீவன் தொண்டமான்

கட்சி பேதமின்றி பொருளாதாரத்தை நிலைநாட்ட வேண்டுமானால் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டுமென இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான ஜீவன் தொண்டமான்(Jeevan Thondaman) தெரிவித்துள்ளார்.

பொகவந்தலாவை, கெர்க்கஸ்வோல்ட் தோட்டபகுதியில் இன்று(18.10.2024) இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இதன்போது, மேலும் கருத்து தெரிவித்த ஜீவன் தொண்டமான், “ஜனாதிபதியை விமர்சனம் செய்து அரசியல் இலாபம் தேடவேண்டியதில்லை.

நாட்டில் மீண்டுமொரு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டால் நாட்டு மக்கள் பாரிய கஸ்டத்தை எதிர்நோக்க நேரீடும்.

எனவே நாம் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்” என தெரிவித்துள்ளார்.

இந்த தேர்தல் பிரசார கூட்டத்தில், நோர்வூட் பிரதேசசபையின் முன்னாள் தலைவர் ரவிகுழந்தைவேல், இலங்கை தொழிலாளர் காங்ரஸின் இளைஞர் அணியின் பொகவந்தலாவ அமைப்பாளர் இளையராஜா, நோர்வூட் பிரதேசசபையின் முன்னாள் உறுப்பினர்கலான மாடசாமி சரோஜா பிரபு, மாவட்ட தலைவர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

Share
தொடர்புடையது
veppam
இலங்கை

கிழக்கினை தாக்கவுள்ள வெப்ப அலை – பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.

நாளைய தினம் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும்...

mini 1
இலங்கை

முன்னாள் அமைச்சர் ஜகத் புஷ்பகுமாரவுக்கு வழங்கப்பட்ட தீர்ப்பு.

இன்றைய தினம் காலை (08.07. 2026) ஊழல் குற்றச்சாட்டுகளின் பேரில் இலஞ்ச ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட...

nilam
இலங்கைபிராந்தியம்

யாழ். வடமராட்சியில் பறிபோக இருக்கும் நிலம் – தொடரும் அத்துமீறல்கள்

யாழ்ப்பாணம் வடமராட்சி பகுதியில் உள்ள காணியொன்று இராணுவத்தினரால் சுவீகரிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த நடவடிக்கை நாளை...

palaali
இலங்கை

யாழ்.பலாலி இராஜேஸ்வரி ஆலயத்தில் தடையற்ற வழிபாடுகள் – நிபந்தனைகளுடன் பாதையினை விடுவிக்க இணங்கிய ராணுவம்

பலாலி இராஜேஸ்வரி அம்மன் ஆலயம் 35 வருடங்களுக்குப் பின்னர் கடந்த வருடம் விடுவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்...