இலங்கைசெய்திகள்பிராந்தியம்

எரிவாயு அடுப்பு வெடிப்பு: கூலித்தொழிலாளியின் வீடு சாம்பலானது!

Share
Mannar gas 02
Share

எரிவாயு அடுப்பு வெடித்த நிலையில், பெண் கூலித் தொழிலாளியின் வீடு எரிந்து சாம்பலான சம்பவம் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் பிரதேச செயலக பிரிவில் உள்ள தரவான் கோட்டை பகுதியில், இன்று (06) மதியம், எரிவாயு அடுப்பு வெடிப்பு சம்பவம் பதிவாகியுள்ளது.

தரவான் கோட்டைப் பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலில் ஈடுபடும் பெண் ஒருவரின் வீட்டில், எரிவாயு அடுப்பு வெடித்தமையைத் தொடர்ந்து குறித்த பெண், அதிர்சியின் காரணமாக மயக்கம் அடைந்த நிலையில், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Mannar gas 01

இதேவேளை குறித்த பெண், வீட்டில் தனிமையில் வசிப்பதுடன், பனம் பொருள் உற்பத்தி தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளார்.

Mannar gas

தற்போது வீடு முற்றுமுழுதாக எரிந்து நாசமாகியுள்ளது. மன்னார் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், நகர சபை அதிகாரிகள் மற்றும் பொலிஸார், சம்பவ இடத்திற்கு சென்று, மேலதிக நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

#SrilankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
25 1
இலங்கைசெய்திகள்

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு கோடியே 72லட்சம் பேர் வாக்களிக்கத் தகுதி

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஒரு ​கோடியே 72 லட்சத்து 96ஆயிரத்து 330 ​பேர் வாக்களிக்கத்...

24 1
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குழப்பம் ஏற்படுத்திய பயணி கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த பயணி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்....

23 2
இலங்கைசெய்திகள்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரம்! ​தொடர்புடைய மாணவர்கள் ஐவருக்கு மனஅழுத்தம்

சப்ரகமுவ பல்கலைக்கழக பகிடிவதை விவகாரத்தில் தொடர்புடையதாக தெரிவிக்கப்படும் ஐந்து மாணவிகள் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

22 2
இலங்கைசெய்திகள்

வங்கி வாடிக்கையாளர்களுக்கான முக்கிய அறிவிப்பு

அனைத்து வங்கிகளும் நாளை காலை 11 மணி வரை மட்டுமே திறந்திருக்கும் என இலங்கை வங்கி...