20220525 135403 scaled
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கிராம உத்தியோகத்தர்கள் ஊடாக எரிவாயு விநியோகம்! – யாழ். அரச அதிபர் தெரிவிப்பு

Share

எரிவாயு சிலிண்டர்கள் மிக சொற்பமான அளவே தற்போது கிடைக்கின்ற நிலையில், எதிர்காலத்தில் பங்கீட்டு அட்டை முறை மூலம் கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர்களின் கண்காணிப்பின் கீழேயே அவற்றை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

இந்த புதிய நடைமுறை பற்றிய கலந்துரையாடல் ஒன்று நேற்று இடம்பெற்றிருந்தது. சில நடைமுறைச் சிக்கல்களை தவிர்த்து எரிவாயு சிலிண்டரை பொதுமக்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டியுள்ளது. இந்த முறை இன்று மாலை இடம்பெறவுள்ள கலந்துரையாடலில் இறுதி செய்யப்பட்டு இனிமேல் இந்த நடைமுறைக்கமையவே யாழ்ப்பாணத்தில் எரிவாயு விநியோகம் இடம்பெறும். இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

நேற்று மற்றும் இன்றைய தினம் எரிவாயு சிலிண்டர் விநியோகத்தின் போது தவிர்க்க முடியாத சில சம்பவங்கள் இடம்பெற்று இருந்தமையை அறிய முடிந்தது. எரிவாயு விநியோகத்தில் சில முறைகேடுகள் இடம்பெறுவதாகவும் கறுப்புச் சந்தையில் விற்கப்படுவதாகவும் பொதுமக்கள் எங்களுக்கு முறையிட்டுள்ளனர்.

ஆகவே இவற்றை தவிர்க்கும் வகையில் பங்கீட்டு அட்டை நடைமுறையை உடனடியாக அமல்படுத்தி அந்தந்த பிரதேச முகவர்கள் ஊடாகவே எரிவாயு சிலிண்டர்களை விநியோகிக்கவுள்ளோம்.பொதுமக்கள் வதந்திகளை நம்பி ஏமாறாமலும் அதிக பணம் கொடுக்காமலும் முறையான நடைமுறைக்கமைய பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம் – என்றார்.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
MediaFile 3 5
செய்திகள்இலங்கை

பேருந்து விபத்துக்களைத் தடுக்க நடமாடும் போதைப்பொருள் சோதனைப் பேருந்து அறிமுகம்: அமைச்சர் பிமல் ரத்நாயக்க திறந்து வைத்தார்!

பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், பயணப் பேருந்து ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களிடையே போதைப்பொருள் பயன்பாட்டைக்...

articles2FISZ4kXqRjW2IZH13NUki
உலகம்செய்திகள்

அவுஸ்திரேலிய செனட் சபை ஒத்திவைப்பு: பர்தா அணிந்து சபைக்குள் நுழைந்த செனட்டர் நீக்கம்!

அவுஸ்திரேலியாவின் செனட் சபை இன்று (நவம்பர் 24) ஒரு மணி நேரத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர...

farmers scaled 1
உலகம்செய்திகள்

பிரித்தானியாவில் குடும்பப் பண்ணை வரிக்கு எதிர்ப்பு: லிங்கன்ஷையரில் விவசாயிகள் டிராக்டர் போராட்டம்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று (நவம்பர் 24) ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இந்த வாரம் சமர்ப்பிக்கப்படவுள்ள வரவு...