tamilni 294 scaled
இலங்கைசெய்திகள்

பாடசாலை மாணவர்களை கொடூரமாக தாக்கிய கும்பல்

Share

பாடசாலை மாணவர்களை கொடூரமாக தாக்கிய கும்பல்

பாணந்துறை, பின்வத்தை பிரதேசத்தில் காதல் உறவின் அடிப்படையில் இரு பாடசாலை மாணவர்கள் மீது கொடூரமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த மாணவர்கள் மீது ஹெல்மெட் மற்றும் கைகளால் உதைத்ததாகக் கூறப்படும் நான்கு இளைஞர்களைக் கண்டுபிடிக்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பின்வத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான பாணந்துறையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் மாணவர்கள் இருவர் பாணந்துறை வைத்தியசாலைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

குறித்த மாணவர்கள் இருவரும் நேற்று பாடசாலை முடிந்து பின்வத்த பிரிவென வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது சந்தேகநபர்கள் வந்து தாக்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

தலை, கண் மற்றும் உடலின் பல பாகங்களில் மாணவர்களின் மீது தாக்கப்பட்டதையடுத்து அவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Share
தொடர்புடையது
Namal 1
இலங்கை

ஒன்றிணைய தயார் – நாமல் வெளியிட்டுள்ள அறிவிப்பு.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போது நாட்டின் நலனுக்காகக்...

e Book Launch In London
இலங்கை

தமிழ் இன அழிப்பிற்கு நீதி கேட்டு வெளியிடப்பட்டுள்ள நூல்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஏற்பாட்டில், தமிழின அழிப்பு புத்தக வெளியீடும் இனப் படுகொலைக்கான நீதிப்...

bike accident 1
இலங்கை

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலி.

நேற்றைய தினம், சிலாபம் – ஆனமடுவை வீதியில் 5ஆம் கட்டைப் பகுதியில் பயணித்துக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்...

oil price 14 2
இலங்கை

மீண்டும் அதிகரிக்கிறதா எரிபொருள் விலை ?

இன்று நள்ளிரவு முதல், மாதாந்த எரிபொருள் விலைத் திருத்தத்திற்கு அமைவாக எரிபொருள் விலையில் உலக சந்தையில்...