13 24
இலங்கைசெய்திகள்

நீதிமன்ற படுகொலை! அதுருகிரிய பொலிஸ் அதிகாரி தொடர்பில் வெளியாகியுள்ள தகவல்

Share

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதுருகிரிய பொலிஸ் அதிகாரி தொடர்பில் புதிய தகவல் வெளியாகியுள்ளது.

கைது செய்யப்பட்ட அதுருகிரிய பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் துபாயில் உள்ள கெஹல்பத்தர பத்மேவுக்கும் இடையேயான நெருங்கிய தொடர்பு குறித்த விவரங்கள் விசாரணைகளில் வெளியாகியுள்ளன.

இந்த தொடர்பு நீண்ட காலமாக நடந்து வந்ததாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

குறிப்பாக சம்பந்தப்பட்ட கான்ஸ்டபிளின் வங்கிக் கணக்கிற்கு சமீபத்தில் 68 இலட்சம் ரூபா வரவு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சஞ்சீவ கொலைக்கு ஆதரவளித்ததற்காக கெஹல்பத்தர பத்மே செலுத்திய பணமாக இந்தப் பணம் இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

அதுருகிரி பொலிஸ் கான்ஸ்டபிள் தனக்குச் சொந்தமான கேடிஹெச் ரக வானை கொலையாளியிடம் தப்பிக்கக் கொடுத்ததால் இருவருக்கும் இடையேயான தொடர்பு மேலும் தெரியவந்துள்ளது.

புத்தளம் பகுதியில் கொழும்பு குற்றப்பிரிவு மற்றும் பொலிஸ் சிறப்புப் படையினரால் கொலையாளியுடன் வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதில் ஒரு முக்கியமான ஆதாரமாக, வானில் காணப்பட்ட பற்றுச்சீட்டின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாரணையின் போது அதுருகிரிய பொலிஸ் அதிகாரி அடையாளம் காணப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...