Fuel
இலங்கைசெய்திகள்

எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ஏற்படாது! – மத்திய வங்கி ஆளுநர்

Share

நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு எதிர்வரும் காலங்களில் ஏற்படமாட்டாது. எரிபொருள் இறக்குமதிக்குத் தேவையான டொலர் விடுவிக்கப்படும். தற்போது கையிருப்பிலுள்ள டொலர் 2 பில்லியனால் குறைவடைந்து உள்ளது.

இவ்வாறு மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தெரிவித்துள்ளார்.

எரிபொருள் இறக்குமதி செய்ய நிதி நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது எனவும் இதனால் எரிபொருள் தட்டுப்பாடு நாட்டில் ஏற்படும் என்றும் கருத்துக்கள் வெளியாகுகின்றன.

இவை முற்றிலும் அடிப்படையற்றவை. நாட்டில் ஒருபோதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது.

எரிபொருள் இறக்குமதிக்கு இந்தியாவிடம் 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி கோரப்பட்டுள்ளது.

அத்துடன் கட்டார் உள்ளிட்ட நாடுகளுடனும் எரிபொருள் நிவாரண அடிப்படையில் பெற பேச்சுக்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மேலும் தற்போது டொலர் கையிருப்பு 2 பில்பியன் வரை குறைவடைந்துள்ளது. இதனால் எரிபொருள் இறக்குமதிக்காக டொலரை விடுவித்தால் ஏதேனும் பாதிப்புக்கள் ஏற்படுமா என்பது குறித்தும் பொருளாதார நிபுணர்கள் ஆராய்ந்து வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...