fuel price
இலங்கைசெய்திகள்

மீண்டும் அதிகரித்தது எரிபொருள் விலை!

Share

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு லங்கா ஐஓசி நிறுவனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி ஒரு லீற்றர் டீசலின் விலை (அனைத்து வகையான டீசல்) 75 ரூபாவாலும், ஒரு லீற்றர் பெற்றோலின் விலை (அனைத்து வகையான) 35 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

குறுகிய காலப்பகுதிக்குள் லங்கா ஐஓசி நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட மூன்றாவது விலை உயர்வு இதுவாகும்.

அத்துடன், எரிபொருள் விலையை அதிகரிப்பது தொடர்பில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்னும் முடிவெடுக்கவில்லை. எனினும், பெற்றோலியக் கூட்டுத்தாபனமும் விலை அதிகரிப்பை மேற்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எரிபொருள் விலை உயர்வானது, ஏனைய பொருட்களின் விலையிலும் தாக்கம் செலுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
anura kumara 1
இலங்கை

பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் – ஜனாதிபதியின் அதிரடி முடிவு!

  நுவரெலியா மாவட்டத்தின் பிரதேச செயலகங்களில் இடம்பெற்றுள்ள நிதி முறைகேடுகள் குறித்து கண்டறிவதற்காக ஜனாதிபதி அநுர...

arested 3
இலங்கை

ACMC கடசியின் உப தவிசாளர் உட்பட ஐவர் போதைப்பொருளுடன் கைது.

ஹெரோயின் போதைப்பொருளுடன் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர்...

death body 2
இலங்கை

கடற்கரைப் பகுதியில் மீட்கப்பட்ட சடலம்!

காலி முகத்திடலுக்கு அருகில் உள்ள கடற்கரைப் பகுதியில் இருந்து நபர் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவரின்...

கெமுனு விஜேரத்ன
இலங்கை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்த கெமுனு விஜேரத்ன !

தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் சமூக வலைத்தளங்கள்...