6 25
இலங்கைசெய்திகள்

எரிபொருளின் விலை குறித்து அமைச்சர் விஜித விடுத்துள்ள அறிவிப்பு

Share

எரிபொருளின் விலை குறித்து அமைச்சர் விஜித விடுத்துள்ள அறிவிப்பு

எரிபொருட்களுக்கான விலைகள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுவதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை காரணமாக எரிபொருள் விலை உயர்வடைந்தால் அதனை எவ்வாறு கட்டுப்படுத்துவது என்பது தொடர்பில் ஆராய விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அவதானிப்பு அறிக்கைகளின் அடிப்படையில் இந்தக் குழு பரிந்துரை செய்யும் என விஜித ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,

“மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழ்நிலையால் எண்ணெய் விலை உயரும் அபாயம் உள்ளது. இது தொடர்பில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கண்காணிப்பு அறிக்கை வழங்கப்பட்டுள்ளது.

அந்த சூழ்நிலையில் தலையிட்டு எண்ணெய் விலையை எவ்வாறு கட்டுப்படுத்துவது மற்றும் அதை எவ்வாறு சமாளிப்பது என்பதை இந்த குழுவும் முடிவு செய்திருந்தது.

அரசாங்கம் எரிபொருள் விலையை குறைத்த போதிலும் பஸ் கட்டணம் ஓரளவு குறைக்கப்பட்ட போதிலும் பாடசாலை போக்குவரத்து கட்டணம் குறைக்கப்படவில்லை.

எனவே, பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து சேவைக் கட்டணங்களை குறைப்பது குறித்த பரிந்துரைகள் இரண்டு வாரங்களுக்குள் பெற்றுக்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...

Suresh Sally 16
இலங்கை

சுரேஷ் சலே தொடர்பில் நீதிமன்றில் கூறிய தகவல்!

  சுரேஷ் சலே சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்சீவ ஜயவர்தன, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்...

மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...