வெள்ளியில் அரச ஊழியர்களுக்கு விடுமுறை : அமைச்சரவை அனுமதி!

தினேஷ் குணவர்த்தன

இந்த வாரத்தில் இருந்து அரச ஊழியர்களுக்கு வெள்ளிக்கிழமைகளை விடுமுறை தினமாக பிரகடனப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தினேஷ் குணவர்தன சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

எனினும், நீர் வழங்கல், சுகாதாரம், மின்சார விநியோகம், கல்வி, பாதுகாப்புச் சேவைகள், போக்குவரத்து மற்றும் பிற அத்தியாவசிய சேவைகள் இதில் உள்ளடங்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டின் காரணமாக பயணிகளுக்குக் கடுமையான போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.

இதனால், அரச ஊழியர்களுக்கும் போக்குவரத்து வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் சிரம் ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக வாரத்தில் கடமையாற்றும் ஒரு நாளை அரச விடுமுறை தினமாக வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, உணவுத் தட்டுப்பாட்டுக்குத் தீர்வாக தமது வீட்டுத்தோட்டங்களில் அல்லது வேறு இடங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அவர்களுக்கான வசதிகளை வழங்குவது தொடர்பிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

#SriLankaNews

Exit mobile version