Corona Treatment 67657
இலங்கைசெய்திகள்

இலவச ஆயுள்வேத கொரோனா சிகிச்சை

Share

இலவச ஆயுள்வேத கொரோனா சிகிச்சை

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுவோர் தங்களின் தனிமைப்படுத்தல் காலங்களை ஆயுள்வேத வைத்திய சிகிச்சையுடன் பெற்றுக் கொள்ள முடியும்.

ஆயுள்வேத வைத்தியசாலைகள் இது தொற்றுக்கு இலவச சிகிச்சை வழங்குகின்றன என கிழக்கு மாகாண சுதேச மருத்துவ திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி இ.சிறிதர் தெரிவித்துள்ளார்.

அதன்படி அட்டாளைச்சேனை தள ஆயுள்வேத வைத்தியசாலை, திருகோணமலை- கப்பல்துறை தள ஆயுள்வேத வைத்தியசாலை, மட்டக்களப்பு தள ஆயுள்வேத வைத்தியசாலை, கிண்ணியா – நடுத்தீவு மாவட்ட ஆயுள்வேத வைத்தியசாலைகளில் ஆகியவற்றில் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இங்கு நீரிழிவு நோய்க்கான பரிசோதனை, குருதி அமுக்க பரிசோதனை, சுவாசப் பரிசோதனை உள்ளிட்ட பல வைத்திய பரிசோதனைகளுடன் சிகிச்சைகளும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடிய பாரம்பரிய உணவு வகைகளும் நாளாந்தம் இலவசமாக வழங்கப்படுகின்றன.

இதற்கு ஆயுள்வேத வைத்திய பொறுப்பதிகாரி மற்றும் சமூக நல வைத்தியர்களை தொடர்பு கொண்டு, கொவிட் – 19 தொடர்பான வைத்திய ஆலோசனைகளுடன் அதற்கான சிகிச்சை முறைகளை முற்றிலும் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்/

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
screenshot 1767577499228 664x430 1
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சமூக ஊடகங்களில் பரவும் பொலிஸ் வெளியீடு ஒரு போலிச் செய்தி: பொதுமக்களுக்கு இலங்கை பொலிஸ் அவசர எச்சரிக்கை!

இலங்கை பொலிஸாரினால் வெளியிடப்பட்டதாகக் கூறி, பொதுமக்களுக்கான பாதுகாப்பு வழிகாட்டல்கள் என்ற பெயரில் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு...

image 870x580 695fced3e49ec
செய்திகள்அரசியல்இலங்கை

ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு ஆலோசனைக் குழு கூட்டம்: வடக்கு காணி விடுவிப்பு மற்றும் ஒலுவில் துறைமுகம் குறித்து முக்கிய முடிவுகள்!

பத்தாவது நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் விசேட கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க...

Weather 1
செய்திகள்இலங்கை

ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்: நாளை மாலை இலங்கை கடற்கரையைக் கடக்கிறது – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், நாளை (10) மாலை...

images 20
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மாவனெல்லை கோர விபத்து: லொறியின் பிரேக் செயலிழந்ததே காரணம்! நேரடி சாட்சியம்.

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் மாவனெல்லை, பல்பாத பகுதியில் இன்று மாலை 3.30 மணியளவில்...