721187541parliamnet5 1
அரசியல்இலங்கைசெய்திகள்

விரைவில் இராஜாங்க அமைச்சர்கள் நியமனம்!

Share

அரசியலமைப்பின் 21ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றிய பிறகு, இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பது தொடர்பில் அரசு அவதானம் செலுத்தியுள்ளது.

30 மற்றும் 40 வரையான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன. இதில் ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எம்.பிக்கள் நால்வருக்கும், பதவிகள் வழங்கப்படவுள்ளன.

அத்துடன், ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிலரும், அரசில் இணைந்து இராஜாங்க அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

அரவிந்தகுமார், வியாஜேந்திரன், சுரேன் ராகவன், காதர் மஸ்தான் உள்ளிட்டவர்களுக்கும் இராஜாங்க அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளன.

21 ஆவது திருத்தச்சட்டமூலத்தை நிறைவேற்றிய பிறகு இராஜாங்க அமைச்சர்களை நியமிப்பதற்கென தற்போது தீர்மானிக்கப்பட்டிருந்தாலும், அதற்கு முன்னதாகக்கூட நியமனம் இடம்பெறலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

#SriLankaNews

 

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...